‘யுனிகார்ன் ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் உலகளவில் நான்காவது இடத்தில் இந்தியா ‘யுனிகார்ன் ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் உலகளவில் நான்காவது இடத்தில் ... ...  உலகளவில் பெரிய பிராண்டு ஆப்பிளுக்கு அடுத்து ரிலையன்ஸ் உலகளவில் பெரிய பிராண்டு ஆப்பிளுக்கு அடுத்து ரிலையன்ஸ் ...
அன்னிய முதலீட்டாளர்கள் ஜூலையில் அதிக முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
00:04

புதுடில்லி:கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், இந்திய சந்தைகளில், அன்னிய முதலீட்டாளர்கள், 3,301 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி குறித்த நம்பிக்கைகள் அதிகரித்ததை அடுத்து, அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய மூலதன சந்தையில், தொடர்ந்து இரண்டாவது மாதமாக அதிகளவில் முதலீட்டை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஜூலையில் பங்குச் சந்தையில், 7,563 கோடி ரூபாயை அவர்கள் முதலீடு செய்துள்ளனர். அதே சமயம், 4,262 கோடி ரூபாய் முதலீட்டை இதே காலத்தில் திரும்ப பெற்றுள்ளனர்.


இதையடுத்து, நிகர முதலீடு, ஜூலையில், 3,301 கோடி ரூபாயாக இருக்கிறது. கொரோனா வுக்கான தடுப்பூசி அறிமுகம் குறித்த நம்பிக்கைகள் அதிகரித்தது, சந்தை உயர்வு மூலமாக அதிக லாபம் பெற வாய்ப்பு போன்ற காரணங்களால், அன்னிய முதலீட்டாளர்கள் ஜூலை மாதத்தில் அதிக முதலீட்டை மேற்கொண்டிருக்கின்றனர்.

இது குறித்து, ‘மார்னிங் ஸ்டார்’ நிறுவனத்தின் துணை இயக்குனர் ஹிமன்ஷு ஸ்ரீவத்ஸவா கூறியதாவது:ஜூலையில் அதிகளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது குறைவு தான்.


கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி நம்பிக்கை அளிப்பதாக இருப்பினும், தொற்று நோயாளிகள் எண்ணிக்கை பல இடங்களில் அதிகரித்து வருகிறது.பல மாநிலங்களில் ஊரடங்குகள் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இதனால், பொருளாதார வளர்ச்சி தாமதமாகும் என்ற கருத்தும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)