பதிவு செய்த நாள்
05 ஆக2020
00:04
புதுடில்லி:கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், இந்திய சந்தைகளில், அன்னிய முதலீட்டாளர்கள், 3,301 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி குறித்த நம்பிக்கைகள் அதிகரித்ததை அடுத்து, அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய மூலதன சந்தையில், தொடர்ந்து இரண்டாவது மாதமாக அதிகளவில் முதலீட்டை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஜூலையில் பங்குச் சந்தையில், 7,563 கோடி ரூபாயை அவர்கள் முதலீடு செய்துள்ளனர். அதே சமயம், 4,262 கோடி ரூபாய் முதலீட்டை இதே காலத்தில் திரும்ப பெற்றுள்ளனர்.
இதையடுத்து, நிகர முதலீடு, ஜூலையில், 3,301 கோடி ரூபாயாக இருக்கிறது. கொரோனா வுக்கான தடுப்பூசி அறிமுகம் குறித்த நம்பிக்கைகள் அதிகரித்தது, சந்தை உயர்வு மூலமாக அதிக லாபம் பெற வாய்ப்பு போன்ற காரணங்களால், அன்னிய முதலீட்டாளர்கள் ஜூலை மாதத்தில் அதிக முதலீட்டை மேற்கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து, ‘மார்னிங் ஸ்டார்’ நிறுவனத்தின் துணை இயக்குனர் ஹிமன்ஷு ஸ்ரீவத்ஸவா கூறியதாவது:ஜூலையில் அதிகளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது குறைவு தான்.
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி நம்பிக்கை அளிப்பதாக இருப்பினும், தொற்று நோயாளிகள் எண்ணிக்கை பல இடங்களில் அதிகரித்து வருகிறது.பல மாநிலங்களில் ஊரடங்குகள் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இதனால், பொருளாதார வளர்ச்சி தாமதமாகும் என்ற கருத்தும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|