பதிவு செய்த நாள்
05 ஆக2020
22:12
புதுடில்லி:‘ஆப்பிள்’ நிறுவனத்துக்கு அடுத்தபடியாக, உலகளவில் இரண்டாவது பெரிய பிராண்டாக, ‘ரிலையன்ஸ்’ உயர்ந்துள்ளது.
உலகளாவிய பிராண்டு மாற்றங்களுக்கான நிறுவனமான, ‘பியூச்சர் பிராண்டு’ நிறுவனத்தின், ‘பியூச்சர் பிராண்டு இண்டெக்ஸ் – 2020’ கணிப்பில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இரண்டாவது இடத்தைப் பிடித்துஉள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:இந்த ஆண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதன் ஒவ்வொரு பண்புகளிலும் சிறந்து விளங்குகிறது.
இந்தியாவில் மிகவும் லாபகரமான நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ், மிகவும் மரியாதைக்குரிய நிறுவன மாகும். மக்கள் சமூகத்துடன் உணர்வு ரீதியாக பிணைக்கப்பட்ட நிறுவனமாக அது இருக்கிறது.நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ‘பெட்ரோ கெமிக்கல்’ நிறுவனமாக இருந்ததை, ‘டிஜிட்டல்’ நிறுவனமாக மாற்றி இருக்கிறார். இந்தியர் களின் அனைத்து தேவைகளுக்குமான ஒரு நிறுவனமாக அதை மாற்றியுள்ளார்.‘கூகுள், பேஸ்புக்’ ஆகிய நிறுவனங்கள், இந்நிறுவனங்களின் பங்குகளை பெற்றுள்ளன.
இந்த ஆண்டு பட்டியலில், ஆப்பிள் முதலிடம் பெற்றுள்ளது. ‘சாம்சங்’ இரண்டாவது இடமும், இதையடுத்து, ‘என்விடியா, மொடாய், நைக், மைக்ரோசாப்ட், ஏ.எஸ்.எம்.எல்., பேபால், நெட்பிளிக்ஸ்’ ஆகிய நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|