பதிவு செய்த நாள்
05 ஆக2020
22:29
மும்பை:நேற்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ், நிப்டி ஆகியவை, துவக்கத்தில் உயர்ந்து, பின் சரிவைச் சந்தித்துள்ளன.
இந்த சரிவுக்கு காரணம், முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எப்.சி., ஆகிய நிறுவன பங்குகளில் லாபத்தை பெறுவதற்காக, அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தது தான்.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் துவக்கத்தில், 452 புள்ளிகள் அதிகரித்தது. பின், வர்த்தக இறுதியில், 24.58 புள்ளிகள் சரிவுடன், 37663.33 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.07 சதவீத சரிவாகும்.
தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, வர்த்தகத்தின் இறுதியில், 6.40 புள்ளிகள் மட்டுமே அதிகரித்து, 11101.65 புள்ளிகளில் நிலைபெற்றது. எச்.டி.எப்.சி., பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்திருந்ததால், அவற்றை விற்று லாபம் பார்க்க முதலீட்டாளர்கள் முனைந்த காரணத்தால், இப்பங்குகள் விலை, 1 சதவீதம் வரை சரிந்தன.
பவர்கிரிட், டெக்மகிந்திரா, இன்போசிஸ், நெஸ்ட்லே இந்தியா, எச்.சி.எல்., டெக் ஆகிய நிறுவன பங்குகளும் விலை சரிந்தன.மாறாக, டாடா ஸ்டீல் பங்குகள் விலை, 6 சதவீதம் உயர்ந்தது. மேலும் டைட்டன், மாருதி, பார்தி ஏர்டெல், மகிந்திரா அண்டு மகிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலையும் நேற்று அதிகரித்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|