நாட்டின் மின்னணு உற்பத்தி 30 சதவீதம் வளர்ச்சி காணும் நாட்டின் மின்னணு உற்பத்தி 30 சதவீதம் வளர்ச்சி காணும் ... சாம்சங் கேலக்ஸி நோட் 20 மற்றும் நோட் 20 அல்டரா போன்களின் விலை என்ன தெரியுமா? சாம்சங் கேலக்ஸி நோட் 20 மற்றும் நோட் 20 அல்டரா போன்களின் விலை என்ன தெரியுமா? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கடன் மறுசீரமைப்பு பரிசீலனை 5 பேர் கொண்ட குழு நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2020
23:26

மும்பை:வங்கி கடன்களை மறுசீரமைப்பதில் பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை, ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.

இக்குழுவின் தலைவராக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான கே.வி.காமத் நியமிக்கப்பட்டுள்ளார்.இக்குழுவில் காமத் தவிர, எஸ்.பி.ஐ., முன்னாள் நிர்வாக இயக்குனர் திவாகர் குப்தா, கனரா வங்கியின் தற்போதைய தலைவர் டி.என்.மனோகரன், ஆலோசகர் அஸ்வின் பரேக், இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் மிட்டல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சுனில் மிட்டல் இக்குழுவின் செயல ராகவும் பொறுப்பு வகிப்பார். இந்த ஐவர் தவிர, தேவைப்பட்டால் மேலும் கூடுதல் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கி அதன் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், நிறுவனங்களின் கடன் மறுசீரமைப்புக்கு அனுமதி வழங்கியதை அடுத்து, இந்த குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இக்குழு, 1,500 கோடி ரூபாய்க்கு மேலான கடன்களை மறுசீரமைப்பதை கண்காணிக்கும்.

இந்த ஐவர் கொண்ட குழுவில், இருவர் உடனடியாக சேரவில்லை என்பதால், துவக்கத்தில் மூவருடன் மட்டுமே செயல்படும். கனரா வங்கியின் தலைவர் டி.என்.மனோகரன், 14ம் தேதி சேர்கிறார். திவாகர் குப்தா, ஆசிய மேம்பாட்டு வங்கியில், அவரது துணைத் தலைவர் பதவிக் காலம் முடிந்ததும், செப்டம்பர் 1ம் தேதியன்று இக்குழுவில் இணைகிறார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)