பதிவு செய்த நாள்
07 ஆக2020
23:26
மும்பை:வங்கி கடன்களை மறுசீரமைப்பதில் பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்காக, ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை, ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
இக்குழுவின் தலைவராக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான கே.வி.காமத் நியமிக்கப்பட்டுள்ளார்.இக்குழுவில் காமத் தவிர, எஸ்.பி.ஐ., முன்னாள் நிர்வாக இயக்குனர் திவாகர் குப்தா, கனரா வங்கியின் தற்போதைய தலைவர் டி.என்.மனோகரன், ஆலோசகர் அஸ்வின் பரேக், இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் மிட்டல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சுனில் மிட்டல் இக்குழுவின் செயல ராகவும் பொறுப்பு வகிப்பார். இந்த ஐவர் தவிர, தேவைப்பட்டால் மேலும் கூடுதல் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கி அதன் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், நிறுவனங்களின் கடன் மறுசீரமைப்புக்கு அனுமதி வழங்கியதை அடுத்து, இந்த குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இக்குழு, 1,500 கோடி ரூபாய்க்கு மேலான கடன்களை மறுசீரமைப்பதை கண்காணிக்கும்.
இந்த ஐவர் கொண்ட குழுவில், இருவர் உடனடியாக சேரவில்லை என்பதால், துவக்கத்தில் மூவருடன் மட்டுமே செயல்படும். கனரா வங்கியின் தலைவர் டி.என்.மனோகரன், 14ம் தேதி சேர்கிறார். திவாகர் குப்தா, ஆசிய மேம்பாட்டு வங்கியில், அவரது துணைத் தலைவர் பதவிக் காலம் முடிந்ததும், செப்டம்பர் 1ம் தேதியன்று இக்குழுவில் இணைகிறார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|