ஓராண்டு இறக்குமதிக்கு நிகராக அன்னிய செலாவணி இருப்பு ஓராண்டு இறக்குமதிக்கு நிகராக அன்னிய செலாவணி இருப்பு ...  நிறுவனங்களின் வணிக நம்பிக்கை குறியீடு இதுவரை இல்லாத வகையில் சரிவு நிறுவனங்களின் வணிக நம்பிக்கை குறியீடு இதுவரை இல்லாத வகையில் சரிவு ...
ரூ.900 கோடி நிதித் தொகுப்பு ஆபரண துறையினர் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2020
23:45

மும்பை, ஆக.9–நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், ஆபரண தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதற்காக, 900 கோடி ரூபாய் நிதித் தொகுப்பை வழங்குமாறு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

தங்க ஆபரண துறைக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக, திறனை அதிகரிக்க உதவும் வகையில், ‘மாதிரி தயாரிப்பு பட்டறை’யையும், ‘தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியம்’ ஒன்றையும் ஏற்படுத்துமாறு, இந்த கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த கவுன்சிலின் தலைவர் கொலின் ஷா கூறியதாவது:எங்களது உறுப்பினர்களில், 85 சதவீதம் பேர் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் இருப்பவர்கள்.இவர்களில் பெரும்பாலானவர்கள், கைகளால் செய்யப்படும் தங்க நகை தயாரித்தல், வைரங்களை நறுக்கி, மெருகேற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

எங்கள் துறையானது உழைப்பு மிகுந்த, ஏற்றுமதி சார்ந்த ஒன்றாகும். இந்நிலையில், துறையை திறன் மிகுந்ததாக மாற்ற, 900 கோடி ரூபாய் நிதி தொகுப்பு தேவை என, அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.மாதிரி தயாரிப்பு பட்டறையை நிறுவுவதன் மூலம், திறன் மேம்பாட்டை அதிகரிக்க இயலும்.


மேலும், தொழில்நுட்ப மேம்பாடு நிதியம் ஒன்றை அமைப்பதன் மூலம், உலகளவிலான போட்டிகளை சமாளிக்க முடியும்.குஜராத்தில் ஏற்கனவே நான்கு ‘பொது வசதி மையங்கள்’ அமைக்கப்பட்டு, வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.அடுத்து கோயம்புத்துார்,
கோல் கட்டா, டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத் ஆகிய இடங்களிலும் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)