பதிவு செய்த நாள்
08 ஆக2020
23:45

மும்பை, ஆக.9–நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், ஆபரண தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதற்காக, 900 கோடி ரூபாய் நிதித் தொகுப்பை வழங்குமாறு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
தங்க ஆபரண துறைக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக, திறனை அதிகரிக்க உதவும் வகையில், ‘மாதிரி தயாரிப்பு பட்டறை’யையும், ‘தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியம்’ ஒன்றையும் ஏற்படுத்துமாறு, இந்த கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த கவுன்சிலின் தலைவர் கொலின் ஷா கூறியதாவது:எங்களது உறுப்பினர்களில், 85 சதவீதம் பேர் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் இருப்பவர்கள்.இவர்களில் பெரும்பாலானவர்கள், கைகளால் செய்யப்படும் தங்க நகை தயாரித்தல், வைரங்களை நறுக்கி, மெருகேற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
எங்கள் துறையானது உழைப்பு மிகுந்த, ஏற்றுமதி சார்ந்த ஒன்றாகும். இந்நிலையில், துறையை திறன் மிகுந்ததாக மாற்ற, 900 கோடி ரூபாய் நிதி தொகுப்பு தேவை என, அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.மாதிரி தயாரிப்பு பட்டறையை நிறுவுவதன் மூலம், திறன் மேம்பாட்டை அதிகரிக்க இயலும்.
மேலும், தொழில்நுட்ப மேம்பாடு நிதியம் ஒன்றை அமைப்பதன் மூலம், உலகளவிலான போட்டிகளை சமாளிக்க முடியும்.குஜராத்தில் ஏற்கனவே நான்கு ‘பொது வசதி மையங்கள்’ அமைக்கப்பட்டு, வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.அடுத்து கோயம்புத்துார்,
கோல் கட்டா, டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத் ஆகிய இடங்களிலும் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|