பதிவு செய்த நாள்
10 ஆக2020
03:58
காப்பீடு நிறுவனங்கள் பாலிசிதாரர்களுக்கு, பாலிசியை மின்னணு வடிவில், ‘இ – மெயில்’ மூலம் அனுப்பி வைக்கவும், அதே நேரத்தில் பாலிசிதாரர் குறிப்பிட்ட காலத்திற்குள் அதை இ – மெயில் மூலமே ரத்து செய்து கொள்ளவும், இந்தியா காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பு சூழலில், காப்பீடு பாலிசிகளை நேரடியாக அனுப்புவதிலும், பெறுவதிலும் சிக்கல் இருப்பதாக பரவலாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம், காப்பீடு நிறுவனங்கள், பாலிசியை மின்னணு வடிவில் இ – மெயில் மூலம் அனுப்பி வைக்க, அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் அனுமதித்துள்ளது.
இந்த நிதியாண்டில் வழங்கப்பட்ட அனைத்து பாலிசிகளுக்கும் இது பொருந்தும். இ – மெயிலில் பாலிசி பெற சம்மதம் என பாலிசி பெறுபவர் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். பாலிசி பெற்றுக்கொள்ளப்பட்டது எனும் உறுதி செய்யப்பட்ட தகவலின் அடிப்படையில், பாலிசியை திரும்பி ஒப்படைப்பதற்கான பிரிலுக் காலம் கணக்கிடப்படும்.
மின்னணு வடிவிலான பாலிசிகளுக்கு பிரிலுக் காலம், 30 நாட்களாக இருக்கலாம். பாலிசியை திரும்பி ஒப்படைக்க விரும்பினால், பிரிலுக் காலத்திற்குள் இ – மெயில் மூலமே அதை அளித்து ரத்து செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|