பதிவு செய்த நாள்
10 ஆக2020
22:10
புதுடில்லி:ஊரடங்கு உத்தரவுகளால் பல வணிகங்கள் இன்னும் மூடப்பட்டிருக்கும் நிலையில், குறு நிறுவனங்கள் மட்டும் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பது, ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது
‘கேம்’ எனும், ‘உலகளாவிய வெகுஜன தொழில்முனைவோர் கூட்டணி’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசின் புதிய வரையறையின்படி, 1 கோடி ரூபாய் முதலீடு அல்லது 5 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் குறு நிறுவனங்கள் ஆகும்.இந்த ஆய்வுக்காக மொத்தம், 1,500 குறு நிறுவனங்களிடம், ‘சர்வே’ எடுக்கப்பட்டது.
இதில், 81 சதவீத நிறுவனங்கள் கொரோனா முடிந்த பிறகு மீட்சியடைவது குறித்து நம்பிக்கையுடன் இருக்கின்றன.செலவுகளை எதிர்கொள்ள, 40 சதவீத நிறுவனங்கள் கடன் வாங்க முயற்சித்துள்ளன.இருப்பினும், வாங்கப்பட்ட மொத்த கடன்களில், 14 சதவீதம் மட்டுமே முறையான கடன் வழங்குனர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கின்றன.
மேலும், 57 சதவீத நிறுவனங்கள், தொழிலை தொடர்ந்து நடத்த ரொக்க கையிருப்பு ஏதுமில்லை என தெரிவித்துள்ளன.பெண் வணிக உரிமையாளர்களைப் பொறுத்தவரை, 70 சதவீதம் பேர், வீட்டுப் பிரச்னைகள் மிகப் பெரிய சவாலாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆண்களைப் பொறுத்தவரை, 53 சதவீதம் பேர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.மேலும், ஆண்களை விட, தாங்க முடியாத அளவு அதிக செலவுகளை எதிர்கொண்டதாக, 46 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|