பதிவு செய்த நாள்
10 ஆக2020
22:45
புதுடில்லி:கன தொழிற்சாலைகள் இருக்கும் இடங்களில், ஊரடங்குகள் மேலும் இல்லாமல் இருந்தால், கடந்த ஜூலை மாதத்தை விட உற்பத்தி அதிகரிக்கும் என, வாகன முகவர்கள் சங்கமான, எப்.ஏ.டி.ஏ., தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த ஜூலையில், பயணியர் வாகன விற்பனை, 25.19 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டதாகவும் இவ்வமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கடந்த ஜூலையில், பயணியர் வாகன விற்பனை, 25.19 சதவீதம் சரிந்து மொத்தம், 1.57 லட்சம் வாகனங்களாக குறைந்துவிட்டது.இதுவே கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனை, 2.10 லட்சம் வாகனங்களாக இருந்தது.
ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு வருவதை அடுத்து, கடந்த மாத வாகன பதிவு, அதற்கு முந்தைய மாதத்தை விட அதிகமாக இருந்தது. இருப்பினும், கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, குறைவாகவே இருக்கிறது.தற்போதைய சந்தை நிலவரங்கள், அகில இந்திய அளவில் சரியான தேவை என்ன என்பதை உணர்த்துவதாக இல்லை.
கிராமப்புறங்களில் டிராக்டர் விற்பனை வளர்ச்சி தொடர்ந்து வலுவாகவே இருக்கிறது. பருவ மழை நன்றாக இருக்கும்பட்சத்தில், சிறிய வர்த்தக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் விற்பனை சிறப்பாக இருக்கும்.வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவை, வாகனக் கடன் கொடுப்பதை மிகுந்த எச்சரிக்கையுடன் அணுகுகின்றன.
குறிப்பாக, வர்த்தக வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் பிரிவின் தேவையில் இவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன.அரசு இந்த துறையின் தேவையை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை வைத்திருக்கிறோம்.
இந்த முழு ஆண்டை பொறுத்தவரை, டிராக்டரை தவிர்த்து இதர வாகன பிரிவு சில்லரை விற்பனையில், 15 – 35 சதவீத வீழ்ச்சி இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை விற்பனைபிரிவு
ஜூலை 2020 ஜூலை 2019 சரிவு
(சதவீதத்தில்)
பயணியர் வாகனம் 2,10,377 1,57,373 25.19
இரு சக்கர வாகனம் 8,74,638 13,98,702 37.47
மூன்று சக்கர வாகனம் 15,132 58,940 74.33
வர்த்தக வாகனம் 19,293 69,338 72.18
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|