பதிவு செய்த நாள்
10 ஆக2020
22:49
புதுடில்லி:முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான, 'பிரஸ்டிஜ்' குழுமம், அதன் பல்வேறு வர்த்தக கட்டடங்களை,'பிளாக்ஸ்டோன்' எனும் உலகளாவிலான முதலீட்டு நிறுவனத்துக்கு விற்பனை செய்வது குறித்து பேச்சு நடத்தி வருகிறது.
பிரஸ்டிஸ் நிறுவனம், அலுவலக பூங்காக்கள், மால்கள் போன்றவற்றை, 12 - 13.5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்து வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் பணத்தை, எதிர்கால வளர்ச்சிக்கும், கடன்களை அடைக்கவும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது.இந்த விற்பனை முயற்சி, இந்த காலாண்டின் இறுதியில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக, இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
பெங்களூரை அடிப்படையாக கொண்ட, 'பிரஸ்டிஜ் எஸ்டேட்ஸ்' அதன், 80 லட்சம் சதுர அடி கொண்ட, முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட அலுவலக பூங்காக்கள் மற்றும் 40 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட, ஒன்பது மால்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய முன்வந்து உள்ளது. மேலும், பிரஸ்டிஜ் குழுமம், அதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும், அலுவலக கட்டட திட்டங்களில், 50 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
துறை சார்ந்த வேறு சிலர், 1.6 கோடி சதுர அலுவலக கட்டடங்கள், ஒன்பது மால்கள், இரண்டு ஓட்டல்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய இருப்பதாக தெரிவிக்கின்றனர்.விற்பனை செய்யப்பட இருப்பதாக சொல்லப்படும் சொத்துக்கள் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ளன.பட்டியலிடப்பட்ட நிறுவனமான, பிரஸ்டிஜ் எஸ்டேட்ஸ் நிறுவனத்துக்கு, 8,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் இருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த, பிளாக்ஸ்டோன் நிறுவனம், இதுவரை இந்திய ரியல் எஸ்டேட்டில், 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளது.பிளாக்ஸ்டோன் - பிரஸ்டிஜ் நிறுவனங்களுக்கு இடையேயான இந்த டீல் நிறைவுற்றால், இதுவே, மதிப்பின் அடிப்படையில் இத்துறையில் இதுவரை இல்லாத மிகப் பெரிய டீலாக இருக்கும்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|