பதிவு செய்த நாள்
10 ஆக2020
22:54
மும்பை:உலக சந்தைகளின் சாதகமான நிலவரம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகளும் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், வர்த்தகத்தின் இடையே, 390.12 புள்ளிகள் அதிகரித்து, பின், வர்த்தக இறுதியில், 141.51 புள்ளிகள் உயர்வுடன், 38182.08 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 56.10 புள்ளிகள் அதிகரித்து, 11270.15 புள்ளிகளில் நிலைபெற்றது.
நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், அதிக விலை உயர்வை, எல்., அண்டு டி., நிறுவன பங்குகள் கண்டன. இந்நிறுவன பங்குகள் விலை, 4 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. எல்., அண்டு டி., நிறுவனத்தை தொடர்ந்து, மகிந்திரா அண்டு மகிந்திரா, சன் பார்மா, என்.டி.பி.சி., டெக் மகிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ஐ.டி.சி., ஆகிய நிறுவன பங்குகளும் அதிக விலை உயர்வு கண்டன.
மாறாக ரிலையன்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், மாருதி, பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் விலை சரிவை சந்தித்தன.அன்னிய முதலீடுகளின் தொடர்ச்சியான வரவு மற்றும் உலக சந்தைகளில் நிலவும் சாதக சூழல் காரணமாக, இந்திய சந்தைகளும் உயர்வைக் கண்டதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதற்கு முந்தைய வர்த்தக தினமான வெள்ளியன்று, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், 397.32 கோடி ரூபாய் முதலீட்டை சந்தையில் மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|