மீளும் குறு நிறுவனங்கள் மட்டும் மிகவும் நம்பிக்கை மீளும் குறு நிறுவனங்கள் மட்டும் மிகவும் நம்பிக்கை ... தங்கம் விலை ஒரேநாளில் சவரன் ரூ.984 சரிவு : இருதினங்களில் ரூ.1,144 குறைந்தது தங்கம் விலை ஒரேநாளில் சவரன் ரூ.984 சரிவு : இருதினங்களில் ரூ.1,144 குறைந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
அன்னிய முதலீடுகளால் ஏற்றம் கண்ட சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2020
22:54

மும்பை:உலக சந்தைகளின் சாதகமான நிலவரம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகளும் உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், வர்த்தகத்தின் இடையே, 390.12 புள்ளிகள் அதிகரித்து, பின், வர்த்தக இறுதியில், 141.51 புள்ளிகள் உயர்வுடன், 38182.08 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 56.10 புள்ளிகள் அதிகரித்து, 11270.15 புள்ளிகளில் நிலைபெற்றது.


நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், அதிக விலை உயர்வை, எல்., அண்டு டி., நிறுவன பங்குகள் கண்டன. இந்நிறுவன பங்குகள் விலை, 4 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. எல்., அண்டு டி., நிறுவனத்தை தொடர்ந்து, மகிந்திரா அண்டு மகிந்திரா, சன் பார்மா, என்.டி.பி.சி., டெக் மகிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ஐ.டி.சி., ஆகிய நிறுவன பங்குகளும் அதிக விலை உயர்வு கண்டன.

மாறாக ரிலையன்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், மாருதி, பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் விலை சரிவை சந்தித்தன.அன்னிய முதலீடுகளின் தொடர்ச்சியான வரவு மற்றும் உலக சந்தைகளில் நிலவும் சாதக சூழல் காரணமாக, இந்திய சந்தைகளும் உயர்வைக் கண்டதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதற்கு முந்தைய வர்த்தக தினமான வெள்ளியன்று, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், 397.32 கோடி ரூபாய் முதலீட்டை சந்தையில் மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)