பதிவு செய்த நாள்
11 ஆக2020
13:15
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று நல்ல ஏற்றம் கண்ட நிலையில் இன்றும்(ஆக.,11) உயர்வுடன் துவங்கின. காலையில் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமான நிலையில் 225 புள்ளிகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 342.50 புள்ளிகள் உயர்ந்து 38,524.58ஆகவும், தேசிய பங்குச்சந்தையின்
நிப்டி 101.75 புள்ளிகள் உயர்ந்து 11,371.90ஆகவும் வர்த்தகமாகின.
அமெரிக்கா - சீனா இடையே இந்தவார இறுதியில் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாலும் அதன் மீதான எதிர்பார்ப்பு,
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், வங்கி தொடர்பான பங்குகள், சன் பார்மா உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பங்குகள் உயர்வுடன் இருந்தது, ஐடி., நிறுவன பங்குகள் ஏற்றம், அந்நிய முதலீடு சற்று அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனயே வர்த்தகமாகின. வர்த்தகநேர இறுதியில் சென்செக்ஸ் 224.93 புள்ளிகள் உயர்ந்து 38,407.01ஆகவும், நிப்டி 52.35 புள்ளகிள் உயர்ந்து 11,322.50ஆகவும் நிறைவடைந்தன.
ரூபாயின் மதிப்பும் உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 12 காசுகள் உயர்ந்து 74.77ஆக வரத்தகமானது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 0.53 சதவீதம் உயர்ந்து 45.23 அமெரிக்க டாலராக விற்பனையானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|