மீளும் குறு நிறுவனங்கள் மட்டும் மிகவும் நம்பிக்கை மீளும் குறு நிறுவனங்கள் மட்டும் மிகவும் நம்பிக்கை ... தங்கம் விலை ஒரேநாளில் சவரன் ரூ.984 சரிவு : இருதினங்களில் ரூ.1,144 குறைந்தது தங்கம் விலை ஒரேநாளில் சவரன் ரூ.984 சரிவு : இருதினங்களில் ரூ.1,144 குறைந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் : சென்செக்ஸ் 225 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2020
13:15

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று நல்ல ஏற்றம் கண்ட நிலையில் இன்றும்(ஆக.,11) உயர்வுடன் துவங்கின. காலையில் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமான நிலையில் 225 புள்ளிகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 342.50 புள்ளிகள் உயர்ந்து 38,524.58ஆகவும், தேசிய பங்குச்சந்தையின்

நிப்டி 101.75 புள்ளிகள் உயர்ந்து 11,371.90ஆகவும் வர்த்தகமாகின.

அமெரிக்கா - சீனா இடையே இந்தவார இறுதியில் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாலும் அதன் மீதான எதிர்பார்ப்பு,

ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், வங்கி தொடர்பான பங்குகள், சன் பார்மா உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பங்குகள் உயர்வுடன் இருந்தது, ஐடி., நிறுவன பங்குகள் ஏற்றம், அந்நிய முதலீடு சற்று அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனயே வர்த்தகமாகின. வர்த்தகநேர இறுதியில் சென்செக்ஸ் 224.93 புள்ளிகள் உயர்ந்து 38,407.01ஆகவும், நிப்டி 52.35 புள்ளகிள் உயர்ந்து 11,322.50ஆகவும் நிறைவடைந்தன.

ரூபாயின் மதிப்பும் உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 12 காசுகள் உயர்ந்து 74.77ஆக வரத்தகமானது.

கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 0.53 சதவீதம் உயர்ந்து 45.23 அமெரிக்க டாலராக விற்பனையானது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)