பதிவு செய்த நாள்
12 ஆக2020
11:16
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரு தினங்களாக ஏற்றத்துடன் துவங்கி, ஏற்றத்துடன் நிறைவடைந்த நிலையில் வர்த்தகவாரத்தின் மூன்றாம் நாளான இன்று(ஆக.,12) சரிவுடன் துவங்கின.
காலை வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 220.50 புள்ளிகள் சரிந்து 38,186.51ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 64.60 புள்ளிகள் சரிந்து 11,257.90ஆகவும் வர்த்தகமாகின.
அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிந்தது, அதன் எதிரொலியாக ஆசிய பங்குச்சந்தைகளும் சரிந்தது மற்றும் ஜுன் மாதத்திற்கான தொழில் துறை உற்பத்தி 16.6 சதவீதமாக சரிந்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் காணப்படுகிறது.
காலை 11.00 மணியளவில் சென்செக்ஸ் 146 புள்ளிகளும், நிப்டி 43 புள்ளிகளும் சரிவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தது.
ரூபாயின் மதிப்பும் சரிவு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.74.80ஆக வர்த்தகமானது.
கச்சா எண்ணெய் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 0.56 சதவீதம் உயர்ந்து 44.75 அமெரிக்க டாலராக வற்பனையானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|