சில்லரை விலை பணவீக்கம் ஜூலையில் 6.93 சதவீதம் சில்லரை விலை பணவீக்கம் ஜூலையில் 6.93 சதவீதம் ...  டிக் டாக் வணிகத்தை வாங்க  ரிலையன்ஸ் நிறுவனம் முயற்சி டிக் டாக் வணிகத்தை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் முயற்சி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மியூச்சுவல் பண்டு திட்டங்களில் குறையும் எஸ்.ஐ.பி., முதலீடுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2020
12:36

புதுடில்லி :மியூச்சுவல் பண்டுகளில், எஸ்.ஐ.பி., எனும், சீரான முதலீட்டு திட்டத்தின் அடிப்படையில் செய்யப்படும் முதலீடுகள், கடந்த ஜூலையில், 22 மாதங்களில் இல்லாத வகையில் குறைந்துவிட்டது.


இம்மாதத்தில், எஸ்.ஐ.பி., முறையில், 7,831 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மொத்தம், 45 நிறுவனங்களை கொண்ட இந்த மியூச்சுவல் பண்டு துறையில், கடந்த, 2018ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்துக்கு பிறகு, இந்த ஜூலை மாதத்தில் தான் மிகக் குறைவான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சிறப்பான முதலீடுகடந்த நான்கு மாதங்களாகவே, எஸ்.ஐ.பி., முறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் குறைந்து வருகின்ற போதும், சில்லரை முதலீட்டாளர்களுக்கு இன்னும் இதுவே சிறப்பான முதலீட்டு வழியாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் ஜூலையில், 2,480 கோடி ரூபாய் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ‘ஆம்பி’ தெரிவித்துள்ளது.


பணப்புழக்கம் குறைவுஇது குறித்து, நிபுணர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:தற்போது மியூச்சுவல் பண்டு திட்டங்களில், 3.27 கோடி எஸ்.ஐ.பி., கணக்குகள் மூலம், முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.கொரோனா பாதிப்பு காரணமாக, பணப்புழக்கம் குறைந்து முதலீடுகளும் குறைந்துவிட்டன. நோய் தொற்று குறைந்து, பொருளாதார நிலை மீண்டும் மீட்சிக்கு திரும்பும் போது, எஸ்.ஐ.பி., மூலமான முதலீடுகளும் அதிகரிக்கத் துவங்கும்.இவ்வாறு அவர்கள்தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)