பதிவு செய்த நாள்
14 ஆக2020
12:36
புதுடில்லி :மியூச்சுவல் பண்டுகளில், எஸ்.ஐ.பி., எனும், சீரான முதலீட்டு திட்டத்தின் அடிப்படையில் செய்யப்படும் முதலீடுகள், கடந்த ஜூலையில், 22 மாதங்களில் இல்லாத வகையில் குறைந்துவிட்டது.
இம்மாதத்தில், எஸ்.ஐ.பி., முறையில், 7,831 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மொத்தம், 45 நிறுவனங்களை கொண்ட இந்த மியூச்சுவல் பண்டு துறையில், கடந்த, 2018ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்துக்கு பிறகு, இந்த ஜூலை மாதத்தில் தான் மிகக் குறைவான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சிறப்பான முதலீடுகடந்த நான்கு மாதங்களாகவே, எஸ்.ஐ.பி., முறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் குறைந்து வருகின்ற போதும், சில்லரை முதலீட்டாளர்களுக்கு இன்னும் இதுவே சிறப்பான முதலீட்டு வழியாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் ஜூலையில், 2,480 கோடி ரூபாய் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ‘ஆம்பி’ தெரிவித்துள்ளது.
பணப்புழக்கம் குறைவுஇது குறித்து, நிபுணர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:தற்போது மியூச்சுவல் பண்டு திட்டங்களில், 3.27 கோடி எஸ்.ஐ.பி., கணக்குகள் மூலம், முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.கொரோனா பாதிப்பு காரணமாக, பணப்புழக்கம் குறைந்து முதலீடுகளும் குறைந்துவிட்டன. நோய் தொற்று குறைந்து, பொருளாதார நிலை மீண்டும் மீட்சிக்கு திரும்பும் போது, எஸ்.ஐ.பி., மூலமான முதலீடுகளும் அதிகரிக்கத் துவங்கும்.இவ்வாறு அவர்கள்தெரிவித்துள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|