பதிவு செய்த நாள்
14 ஆக2020
22:36
மும்பை:மத்திய அரசுக்கு, 57 ஆயிரத்து, 128 கோடி ரூபாய் உபரித் தொகையை வழங்க, ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2019 – 20ம் கணக்கு ஆண்டுக்கான 57 ஆயிரத்து, 128 கோடி ரூபாய் உபரித் தொகையை, ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு வழங்க, சக்திகாந்த தாஸ் தலைமையிலான நிர்வாக குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இடர்ப்பாட்டு நிதியை 5.5 சதவீதமாக பரமாரிக்கவும், நிர்வாக குழு அனுமதி வழங்கி உள்ளது.
ரிசர்வ் வங்கி மத்திய நிர்வாக குழுவின் 584 வது கூட்டத்தில் மேலும் சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி, தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.இது குறித்து அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்த கூட்டத்தில், புதுமை மையம் ஆரம்பிக்கும் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் கடந்த ஆண்டு செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை; உள்நாட்டு மற்றும் உலகளவிலான சவால்கள் குறித்தும், ரிசர்வ் வங்கி அது சம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட்டது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|