தொழில்நுட்பத் துறையில்  முதலீடுகள் அதிகரிப்பு தொழில்நுட்பத் துறையில் முதலீடுகள் அதிகரிப்பு ...  ஜூலை மாதத்தில் குறைந்த நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை ஜூலை மாதத்தில் குறைந்த நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கடன் திட்டங்களுக்கு வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2020
22:31

புதுடில்லி:மியூச்சுவல் பண்டு துறையில், கடந்த ஜூலை மாதத்தில், 5.6 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. இவற்றில், 4 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகள், கடன் திட்டங்களில் துவக்கப்பட்டுள்ளன.

ஜூலையில், மொத்த முதலீட்டாளர் கணக்கு எண்ணிக்கை, 9.21 கோடி ஆக உள்ளது. மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, 'ஆம்பி' வழங்கியிருக்கும் தகவல்களின்படி, 45 மியூச்சுவல் பண்டு நிறுவனங்களிடம், ஜூலை மாதத்தில், மொத்தம், 9.21 கோடி கணக்குகள் உள்ளன. ஜூன் மாத இறுதியில், 9.15 கோடி கணக்குகள் இருந்தன. மேலும் ஜூனில், 5 லட்சம் புதிய கணக்குகள் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜூலையில் அதிகஅளவில் புதிய கணக்குகள் துவக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது, முதலீட்டாளர்கள் சந்தையின் ஏற்ற, இறக்கங்களை அதிகம் பொருட்படுத்தவில்லை என்பது தெரிகிறது. அதே சமயம், மியூச்சுவல் பண்டு திட்டங்களுடன் தொடர்புடைய சந்தை அபாயங்களையும் அவர்கள் புரிந்து கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

கடந்த மே மாதத்தில், 6.13 லட்சம் முதலீட்டாளர் கணக்குகளும், ஏப்ரலில், 6.82 லட்சம் கணக்குகளும், மார்ச்சில், 9.1 லட்சம் கணக்குகளும் துவக்கப்பட்டுள்ளன.கடந்த ஜூலையில், பங்கு சார்ந்த திட்டங்களில் கணக்குகள் எண்ணிக்கை, 368 குறைந்து, 6.37 கோடியாக உள்ளது.ஆனால், கடன் சார்ந்த திட்டங்களில் கணக்குகளின் எண்ணிக்கை, 4.25 லட்சம் அதிகரித்து, 68.85 லட்சமாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)