பதிவு செய்த நாள்
15 ஆக2020
22:31
புதுடில்லி:மியூச்சுவல் பண்டு துறையில், கடந்த ஜூலை மாதத்தில், 5.6 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. இவற்றில், 4 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகள், கடன் திட்டங்களில் துவக்கப்பட்டுள்ளன.
ஜூலையில், மொத்த முதலீட்டாளர் கணக்கு எண்ணிக்கை, 9.21 கோடி ஆக உள்ளது. மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, 'ஆம்பி' வழங்கியிருக்கும் தகவல்களின்படி, 45 மியூச்சுவல் பண்டு நிறுவனங்களிடம், ஜூலை மாதத்தில், மொத்தம், 9.21 கோடி கணக்குகள் உள்ளன. ஜூன் மாத இறுதியில், 9.15 கோடி கணக்குகள் இருந்தன. மேலும் ஜூனில், 5 லட்சம் புதிய கணக்குகள் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜூலையில் அதிகஅளவில் புதிய கணக்குகள் துவக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது, முதலீட்டாளர்கள் சந்தையின் ஏற்ற, இறக்கங்களை அதிகம் பொருட்படுத்தவில்லை என்பது தெரிகிறது. அதே சமயம், மியூச்சுவல் பண்டு திட்டங்களுடன் தொடர்புடைய சந்தை அபாயங்களையும் அவர்கள் புரிந்து கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
கடந்த மே மாதத்தில், 6.13 லட்சம் முதலீட்டாளர் கணக்குகளும், ஏப்ரலில், 6.82 லட்சம் கணக்குகளும், மார்ச்சில், 9.1 லட்சம் கணக்குகளும் துவக்கப்பட்டுள்ளன.கடந்த ஜூலையில், பங்கு சார்ந்த திட்டங்களில் கணக்குகள் எண்ணிக்கை, 368 குறைந்து, 6.37 கோடியாக உள்ளது.ஆனால், கடன் சார்ந்த திட்டங்களில் கணக்குகளின் எண்ணிக்கை, 4.25 லட்சம் அதிகரித்து, 68.85 லட்சமாக உயர்ந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|