பதிவு செய்த நாள்
16 ஆக2020
22:58
கடன் தவணையை தள்ளிவைக்கும் சலுகை வசதியை நாடியவர்கள், வீட்டுக்கடனை வேறு வங்கிக்கு மாற்றிக் கொள்வதில் புதிய சிக்கல் உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
கொரோனா முடக்கத்தின் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், கடனுக்கான மாதத் தவணை செலுத்துவதை தள்ளிவைக்கும் சலுகையை, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அளிக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது.நிதி நெருக்கடியில் இருப்பவர்களுக்கு இது உதவும் என்றாலும், இந்த சலுகையை நாடுவதால், கடன் சுமை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பது பற்றி பேசப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கடன் தவணை தள்ளிவைப்பை நாடியவர்கள், குறைவான வட்டி விகித பலனை பெற வீட்டுக்கடனை வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ள விரும்பினால், அவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தள்ளிவைப்பு சலுகையை நாடியவர்கள், நிதி நெருக்கடியில் இருப்பதாக கருதப்படலாம் என்பதே இதற்கு காரணம்.
இந்த நிலையை தவிர்க்க, வீட்டுக்கடனை மாற்றிக்கொள்ள விரும்புகிறவர்கள், கடன் தவணை சலுகை காலம் முடிந்த பின், சில மாதங்கள் முறையாக தவணை செலுத்திவிட்டு, வீட்டுக்கடனை வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என, வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|