பதிவு செய்த நாள்
16 ஆக2020
23:11
கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள புதிய இயல்பு நிலைக்கு நடுவே, மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் பெரும்பாலான துறைகளில் பணிகள் மீண்டும் துவங்கியிருக்கின்றன. திரையரங்குகள் போன்றவை திறக்கும் சூழல் இல்லை என்றாலும், கட்டுப்பாடுகளுடன் பயணங்கள் துவங்கியிருக்கின்றன.
அதிக கூட்டம் இல்லாத இடங்கள் மற்றும் திறந்தவெளி இடங்களுக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் நிலை உருவாகி வருகிறது. எனினும், சுற்றுலா பயணத்தை தீர்மானிக்கும் முன், நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்விகள் இருக்கின்றன.
கட்டுப்பாடுகள் என்ன?
நாமும் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளலாமா எனும் கேள்விக்கு விடை காண, முதலில் பயண இடங்களுக்கான கட்டுப்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்தாலும், பல மாநிலங்களில் கட்டுப்பாடு இருக்கிறது. வெளிநாடுகள் எனில், 14 நாள் தனிமைப்படுத்தல் அவசியமாகலாம்.
சொந்த வாகனம்:
பாதுகாப்பு முக்கியம் என்பதால், சொந்த வாகனத்தில் பயணம் செய்வது நல்லது என கருதப்படுகிறது. எனினும், நீண்ட தொலைவில் உள்ள இடம் எனில் விமான பயணத்தை தவிர்க்க முடியாது. எனவே, காரில் சென்று வரக்கூடிய இடங்களை தேர்வு செய்வது சிறந்தது. சுற்றுலா நிறுவனங்கள் இத்தகைய சிறிய பயணங்களை ஏற்பாடு செய்கின்றன.
ஓட்டல் பாதுகாப்பு:
சுற்றுலா செல்லும் இடங்களில் பாதுகாப்பான தங்குமிடம் அவசியம். பொதுமுடக்க காலத்தை பயன்படுத்தி, புதிய சுகாதார நெறிமுறைகளுக்கு ஏற்ப தங்கள் அறைகளை ஓட்டல்கள் தயார் செய்துள்ளன. தேவையான இடங்களில் சானிடைசர் வசதிகள் அளிக்கப்படுகின்றன. இத்தகைய நடைமுறைகளை விசாரித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தள்ளுபடிகள் உண்டா?
பொதுவாக சுற்றுலா பயணங்களில், சலுகைகளையும், தள்ளுபடிகளையும் எதிர்பார்க்கலாம். எனினும், தற்போதைய சூழலில், சுற்றுலா நிறுவனங்கள், சலுகைகளை விட, பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வதன் மூலம், வாடிக்கையாளர்களை கவர்வதில் கவனம் செலுத்துகின்றன.
தனிப்பட்ட கவனம்:
எல்லா இடங்களிலும் சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தாலும், தனிப்பட்ட முறையிலும் கவனமாக இருப்பது அவசியம். மேலும், கையில் மருத்துவ ஆவணங்களை வைத்திருப்பதும் நல்லது. பயணத்திற்கு கொரோனா காப்பீடு வசதி பொருந்துமா என தெரிந்து கொள்வதும் அவசியம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|