தங்கம் விலை சவரன் ரூ.200 சரிவுதங்கம் விலை சவரன் ரூ.200 சரிவு ...  ‘அர்பன்லேடர், மில்க்பாஸ்கெட்’ ரிலையன்ஸ் வாங்க முயற்சி ‘அர்பன்லேடர், மில்க்பாஸ்கெட்’ ரிலையன்ஸ் வாங்க முயற்சி ...
கொரோனாவால் தனிநபர் இழப்பு 27 ஆயிரம் ரூபாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2020
23:17

மும்பைகொரோனாவால், ஒட்டு மொத்த இந்தியாவில் தனிநபர் இழப்பு, 27 ஆயிரம் ரூபாயாகவும்; தமிழகத்தில், 40 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாகவும் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை கணித்து அறிவித்துள்ளது.


வளர்ச்சி

மேலும், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 16.5 சதவீதமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.கடந்த மே மாதத்தில், எஸ்.பி.ஐ., ஆராய்ச்சி அறிக்கையான, ஈகோவ்ராப், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பொருளாதார வளர்ச்சி, மைனஸ் 20 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது, மைனஸ் 16.5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

எஸ்.பி.ஐ., அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இதுவரை, 1,000த்துக்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின், முதல் காலாண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய அளவில்இவற்றில் முன்னணி நிறுவனங்களில் இழப்பு, 25 சதவீதத்துக்கு அதிகமாகவும், மற்றவற்றில், 55 சதவீதத்துக்கு அதிகமாகவும் இருப்பது தெரிய வந்து உள்ளது.

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில், 16.8 சதவீதமாக உள்ளது.மஹாராஷ்டிராவில் இது, 14.2 சதவீதமாகவும்; தமிழகத்தில், 9.2 சதவீதமாகவும்; உத்தர பிரதேசத்தில், 8.2 சதவீதமாகவும் உள்ளன.

மேலும், தனிநபர் இழப்பை பொறுத்தவரை, அகில இந்திய அளவில், 27 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதில் தமிழகம், குஜராத், தெலுங்கானா, டில்லி, ஹரியானா, கோவா ஆகிய மாநிலங்களில், கொரோனாவால் தனிநபர் இழப்பு, 40 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)