பதிவு செய்த நாள்
18 ஆக2020
00:14
சேலம்:கேரளாவில், அடுத்தடுத்து நடந்த துயரச் சம்பவங்களால், ஓணம் பண்டிகைக்காக அம்மாநில வியாபாரிகள், சேலத்தில் வெள்ளி ஆபரணங்கள், பட்டு வேட்டிகள், சேலைகளின் ஆர்டரை நிறுத்தியதால், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தக முடக்கம் ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு, விமான விபத்து ஆகியவற்றின் காரணமாக, அம்மாநில மக்கள், ஓணம் பண்டிகை கொண்டாட்டத்துக்கான பொருட்களை கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. ஆக., 31ல் ஓணம் பண்டிகை வரவுள்ளது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பும், பின்பும் என, 20 நாட்களுக்கும் மேலாக, கேரளா திருவிழா கோலம் பூணுவதோடு, மக்கள் பொருட்களை வாங்கி குவிப்பதும் வழக்கம்.
நடப்பாண்டில் அசாதாரண சூழ்நிலை காணப்படுவதால், அம்மாநில வியாபாரிகள், பொருட்கள் கொள்முதலுக்கான, ‘ஆர்டர்’ கொடுக்கவில்லை; சிலர் கொடுத்த ஆர்டரை ரத்து செய்தனர். கேரள மாநில வியாபாரிகள், வெள்ளி கொலுசு, அரைஞாண் கொடி, மெட்டி ஆகியவற்றுக்கு ஆர்டர் கொடுக்காததால், சேலத்தில் வெள்ளி பட்டறைகள் மூடிக் கிடக்கின்றன.
நடப்பாண்டில் சேலத்தில், வெள்ளி ஆபரணங்களை பொறுத்தவரை, 500 கோடி ரூபாய் வர்த்தகம் அவுட்டாகி விட்டது. இதே போல் ஜவுளி வர்த்தகத்திலும், 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|