பதிவு செய்த நாள்
18 ஆக2020
21:59
புதுடில்லி:நாட்டின் வேளாண் ஏற்றுமதி, கடந்த மார்ச் முதல் ஜூன் வரையிலான காலத்தில், 23.24 சதவீதம் அதிகரித்துள்ளது. 25 ஆயிரத்து, 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் வேளாண் பொருட்கள், இக்காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, விவசாய அமைச்சகம் தெரிவித்துஉள்ளதாவது:உலக கோதுமை உற்பத்தியில், இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. ஆனால், ஏற்றுமதியில், 34வது இடத்தில் இருக்கிறது. இதேபோல், காய்கறி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருந்தபோதும், ஏற்றுமதியில், 14வது இடத்தில் இருக்கிறோம்.
பழங்களைப் பொறுத்தவரையும் அதே நிலை. உற்பத்தியில் இரண்டாவது இடத்தில்; ஆனால், ஏற்று மதியில், 23வது இடம்.வளைகுடா நாடுகளில் ஏற்றுமதி அதிகரிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, இந்தியாவுக்கான வலுவான சந்தையாகும். தற்போது, இந்நாடுகளுக்கு, நாட்டின் மொத்த ஏற்றுமதியில், 10-- – 12 சதவீதம் அளவுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஏற்றுமதியை அதிகரிக்கும் பொருட்டு, பொருட்களின் மதிப்புக்கூட்டல் மற்றும் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான மாற்று ஆகியவற்றில் கவனம் செலுத்தும் செயல் திட்டங்கள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|