பதிவு செய்த நாள்
18 ஆக2020
22:07
புதுடில்லி:சீனாவின் மக்கள் வங்கி, நாட்டின் தனியார் துறை வங்கிகளில் ஒன்றான, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் முதலீட்டை மேற்கொண்டது, சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டின் துவக்கத்தில், மும்பையை தலைமையிடமாக கொண்ட, நிதிச் சேவை நிறுவனமான, எச்.டி.எப்.சி., நிறுவனத்தில், ‘மக்கள் வங்கி’ முதலீட்டை மேற்கொள்ளவும், இந்திய சந்தைகளில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியிலும், மக்கள் வங்கி முதலீட்டை மேற்கொண்டு உள்ளது.
அண்மையில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, 15 ஆயிரம் கோடி ரூபாயை, தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டின் மூலம் திரட்ட முன்வந்தது.இதையடுத்து, 357 தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள், முதலீட்டை மேற்கொண்டனர். இவற்றில் உள்நாட்டு மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள், சிங்கப்பூர் அரசு உள்ளிட்ட பல நிறுவனங்கள் அடங்கும்.இந்த வகையில், சீனாவின் மக்கள் வங்கியும், 15 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் மக்கள் வங்கி, எச்.டி.எப்.சி.,யின் பங்குகளை வாங்கி,
1 சதவீதத்துக்கும் மேல் தன்வசமாக்கிக் கொண்டது. இது, சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து, மத்திய அரசு, அன்னிய முதலீட்டு விதிமுறைகளில் சில கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, சீனா தொடர்புடைய முதலீடுகளில் பிடியை இறுக்கியது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த மூன்று மாதங்களில், எச்.டி.எப்.சி.,யில் தன் பங்கை, 1 சதவீதத்துக்கும் கீழே இறக்கியது, சீன வங்கி.சீன மக்கள் வங்கியின் முதலீடு, மிகச் சிறிய அளவிலானது என்பதால், அவை பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தி விடாது என, நிபுணர்கள் கூறுகின்றனர்.
சீன முதலீடுகளுக்கு தற்போது இந்தியாவில் தடை எதுவும் கிடையாது என்றாலும், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகள் காரணமாக, மக்கள் வங்கியின் முதலீடு, அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|