வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு ... தங்கம் விலை சவரன் ரூ.168 சரிவு தங்கம் விலை சவரன் ரூ.168 சரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் சீனாவின் மக்கள் வங்கி முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2020
22:07

புதுடில்லி:சீனாவின் மக்கள் வங்கி, நாட்டின் தனியார் துறை வங்கிகளில் ஒன்றான, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் முதலீட்டை மேற்கொண்டது, சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்த ஆண்டின் துவக்கத்தில், மும்பையை தலைமையிடமாக கொண்ட, நிதிச் சேவை நிறுவனமான, எச்.டி.எப்.சி., நிறுவனத்தில், ‘மக்கள் வங்கி’ முதலீட்டை மேற்கொள்ளவும், இந்திய சந்தைகளில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியிலும், மக்கள் வங்கி முதலீட்டை மேற்கொண்டு உள்ளது.

அண்மையில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, 15 ஆயிரம் கோடி ரூபாயை, தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டின் மூலம் திரட்ட முன்வந்தது.இதையடுத்து, 357 தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள், முதலீட்டை மேற்கொண்டனர். இவற்றில் உள்நாட்டு மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள், சிங்கப்பூர் அரசு உள்ளிட்ட பல நிறுவனங்கள் அடங்கும்.இந்த வகையில், சீனாவின் மக்கள் வங்கியும், 15 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.


கடந்த மார்ச் மாதத்தில் மக்கள் வங்கி, எச்.டி.எப்.சி.,யின் பங்குகளை வாங்கி,
1 சதவீதத்துக்கும் மேல் தன்வசமாக்கிக் கொண்டது. இது, சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து, மத்திய அரசு, அன்னிய முதலீட்டு விதிமுறைகளில் சில கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, சீனா தொடர்புடைய முதலீடுகளில் பிடியை இறுக்கியது.


இதன் தொடர்ச்சியாக, கடந்த மூன்று மாதங்களில், எச்.டி.எப்.சி.,யில் தன் பங்கை, 1 சதவீதத்துக்கும் கீழே இறக்கியது, சீன வங்கி.சீன மக்கள் வங்கியின் முதலீடு, மிகச் சிறிய அளவிலானது என்பதால், அவை பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தி விடாது என, நிபுணர்கள் கூறுகின்றனர்.


சீன முதலீடுகளுக்கு தற்போது இந்தியாவில் தடை எதுவும் கிடையாது என்றாலும், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகள் காரணமாக, மக்கள் வங்கியின் முதலீடு, அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)