பதிவு செய்த நாள்
22 ஆக2020
00:57
புதுடில்லி:சமூக ஊடகங்கள் மூலமாக, உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்படுவது குறித்து முதலீட்டாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு, மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகியவை எச்சரித்துள்ளன.
பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட சில நிறுவனங்கள் குறித்து, குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்ஆப் செய்திகள் வெளிவந்ததை அடுத்து, பங்குச் சந்தைகள் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளன.சமீபநாட்களாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் குறித்து விரும்பத்தகாத செய்திகள் பரப்பப்படுவதாக தங்களுக்கு மின்னஞ்சல்கள் அதிகளவில் வருவதாகவும், இவை குறித்து முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் இரு பங்குச் சந்தைகளும் தெரிவித்துள்ளன.
மேலும், இத்தகைய மின்னஞ்சல்களின் உண்மை தன்மை குறித்து அறியும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பங்குச் சந்தைகள் தெரிவித்துள்ளன. கடந்த காலங்களிலும் இதே போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. பங்குகளில் முதலீடுகளை செய்ய வைக்கும் நோக்கிலோ அல்லது விற்பனை செய்ய வைக்கும் நோக்கிலோ, சில நிறுவனங்கள் குறித்து தவறான குறுஞ்செய்திகள் உலா வந்தது உண்டு.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|