பதிவு செய்த நாள்
22 ஆக2020
01:05
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் இதுவரை, 88 ஆயிரத்து, 652 கோடி ரூபாய் ரீபண்டு தொகை, 24.64 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
இதில் தனிநபருக்கான ரீபண்டு தொகையாக, 28 ஆயிரத்து, 180 கோடி ரூபாய், 23.05 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவன வரியில் ரீபண்டாக, 1.58 லட்சம் பேருக்கு, 60 ஆயிரத்து, 472 கோடி ரூபாய் இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
கொரோனா கால பொருளாதார நெருக்கடிகளில் தனி நபர்களும், நிறுவனங்களும் சிக்கியதை அடுத்து, வருமான வரி ரீபண்டுகளை விரைவாக வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ரீ பண்டுகள் குறித்த கோரிக்கைகள் விரைவாக பரிசீலிக்கப்பட்டு, ரீ பண்டு தொகை உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|