பதிவு செய்த நாள்
22 ஆக2020
01:35
மும்பை:வாரத்தின் இறுதி வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன.
மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ், 214 புள்ளிகள் உயர்வை சந்தித்தது. இதற்கு, எச்.டி.எப்.சி., ஏஷியன் பெயின்ட்ஸ் நிறுவன பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டதும் காரணமாக அமைந்தது.வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ், 359 புள்ளிகள் அளவுக்கு உயர்ந்தது. பின், வர்த்தகத்தில் இறுதியில், 214.33 புள்ளிகள் உயர்வுடன், 38434.72 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, 0.56 சதவீத உயர்வாகும்.
இதேபோல், தேசிய பங்குச் சந்தையின்நிப்டியும், 59.40 புள்ளிகள் அதிகரித்து, 11371.60 புள்ளிகளில் நிலை பெற்றது.சென்செக்ஸ் பிரிவில், என்.டி.பி.சி., நிறுவன பங்குகள், 5 சதவீதம் அளவுக்கு உயர்வை சந்தித்தன. இதையடுத்து, பவர்கிரிட், ஏஷியன் பெயின்ட்ஸ், எச்.டி.எப்.சி., வங்கி, சன் பார்மா, நெஸ்ட்லே இந்தியா, எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் வங்கி ஆகிய பங்குகளின் விலையும் அதிகரித்தன.
மாறாக, ஓ.என்.ஜி.சி., பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலை, சரிவை சந்தித்தன.குறிப்பிட்ட சில பங்குகளில் முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வம் காரணமாக, நேற்று பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்தன. மேலும், உள்நாட்டு சந்தை மீதான நம்பிக்கையும் அதிகரித்து, சந்தையை உயர்த்த காரணமாக அமைந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|