பதிவு செய்த நாள்
22 ஆக2020
01:42
புதுடில்லி:கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், தங்களுடைய முதலீட்டை அதிகளவில் வெளியே எடுத்த அன்னிய முதலீட்டாளர்கள், ஜூன் காலாண்டில், அதிகளவிலான முதலீட்டை மேற்கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மட்டும், கிட்டத்தட்ட, 30 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.இதற்கு, பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள், பங்கு களின் மதிப்பு ஈர்க்கும் வகையில் அதிகரித்தது ஆகியவை முக்கிய காரணங்களாக இருந்ததாக, அமெரிக்காவைச் சேர்ந்த நிதி சேவை நிறுவனமான, மார்னிங்ஸ்டார் தெரிவித்துள்ளது.
ஜூன் மாத இறுதி நிலவரப்படி, பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் செய்த முதலீடு, 34 ஆயிரத்து, 400 கோடி டாலர். இதுவே, மார்ச் மாத இறுதியில், 28 ஆயிரத்து, 100 கோடி டாலராக இருந்தது. கிட்டத்தட்ட, 23சதவீத அதிகரிப்பாகும்.ஜூன் காலாண்டை பொறுத்தவரை, ஆரம்பத்தில் அன்னிய முதலீடுகள் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை. ஏப்ரல் மாதத்திலும் முதலீட்டை ஓரளவு வெளியே எடுத்தவர்கள், பின், மே மற்றும் ஜூன் மாதங்களில்தான் அதிகமாக முதலீடு செய்துள்ளனர்.
இது குறித்து, மார்னிங்ஸ்டார் தெரிவிக்கும்போது, இந்தியா -– சீனா இடையேயான எல்லையில் நடைபெற்ற மோதல், அன்னிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதித்தது.பிறகு பதற்றம் தணியத் துவங்கவும், மீண்டும் முதலீடுகளை மேற்கொள்ளத் துவங்கினர் என தெரிவித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|