அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு அமெரிக்கா, பிரிட்டனை விட சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு ... தங்கம் விலை சவரன் ரூ.40 ஆயிரத்திற்கு கீழ் வந்தது தங்கம் விலை சவரன் ரூ.40 ஆயிரத்திற்கு கீழ் வந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குகளில் அன்னிய முதலீடு ஜூன் காலாண்டில் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2020
01:42

புதுடில்லி:கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், தங்களுடைய முதலீட்டை அதிகளவில் வெளியே எடுத்த அன்னிய முதலீட்டாளர்கள், ஜூன் காலாண்டில், அதிகளவிலான முதலீட்டை மேற்கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மட்டும், கிட்டத்தட்ட, 30 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.இதற்கு, பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள், பங்கு களின் மதிப்பு ஈர்க்கும் வகையில் அதிகரித்தது ஆகியவை முக்கிய காரணங்களாக இருந்ததாக, அமெரிக்காவைச் சேர்ந்த நிதி சேவை நிறுவனமான, மார்னிங்ஸ்டார் தெரிவித்துள்ளது.

ஜூன் மாத இறுதி நிலவரப்படி, பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் செய்த முதலீடு, 34 ஆயிரத்து, 400 கோடி டாலர். இதுவே, மார்ச் மாத இறுதியில், 28 ஆயிரத்து, 100 கோடி டாலராக இருந்தது. கிட்டத்தட்ட, 23சதவீத அதிகரிப்பாகும்.ஜூன் காலாண்டை பொறுத்தவரை, ஆரம்பத்தில் அன்னிய முதலீடுகள் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை. ஏப்ரல் மாதத்திலும் முதலீட்டை ஓரளவு வெளியே எடுத்தவர்கள், பின், மே மற்றும் ஜூன் மாதங்களில்தான் அதிகமாக முதலீடு செய்துள்ளனர்.

இது குறித்து, மார்னிங்ஸ்டார் தெரிவிக்கும்போது, இந்தியா -– சீனா இடையேயான எல்லையில் நடைபெற்ற மோதல், அன்னிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதித்தது.பிறகு பதற்றம் தணியத் துவங்கவும், மீண்டும் முதலீடுகளை மேற்கொள்ளத் துவங்கினர் என தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)