பதிவு செய்த நாள்
24 ஆக2020
21:22
புதுடில்லி:கொரோனா பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடிகளை சமாளிக்க, பல மாநில அரசுகள், தங்கள் வசம் இருக்கும் நிலங்களை விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளன.
குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள், இம்முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன.கிடங்குகள்பல மாநிலங்களில், தொழிற்சாலை மற்றும் கிடங்குகள் ஆகியவற்றுக்கான பூங்காக்களை அமைத்து கொடுக்கும் பன்னாட்டு நிறுவனங்களிடம், நிலங்களை விற்பது குறித்த பேச்சுகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து, சிங்கப்பூரை தலைமையகமாக கொண்ட, ரியல் எஸ்டேட் நிறுவனமான, எவர்ஸ்டோன் குழுமம் கூறியதாவது:தொழிற்சாலை மற்றும் கிடங்குகளுக்கான பூங்காக்களை உருவாக்குவதற்காக தமிழ்நாடு, ஹரியானா, மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநில அரசுகளுடன் கூட்டு வைத்துள்ளோம்.மேலும் டில்லி, குஜராத், உத்தர கண்ட், உத்தர பிரதேசம் போன்ற வேறு சில மாநிலங்களும், தங்களுடைய நிலங்களின் மூலம் பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.இவ்வாறு, எவர்ஸ்டோன் தெரிவித்து உள்ளது.
சலுகைகள்
டில்லி அரசு, 10 லட்சம் சதுர அடி இடத்தை வணிக மேம்பாட்டுக்காக ஒதுக்கி, அதன் மூலம், 6,000 கோடி ரூபாய் திரட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.பல மாநில அரசுகள், தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி அவர்களை ஈர்க்கும் முயற்சியிலும் இறங்கி உள்ளன.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|