பதிவு செய்த நாள்
24 ஆக2020
21:25
மும்பை:அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவது, உலக சந்தைகளில் நிலவும் பாசிட்டிவ் மனநிலை, நிதி சார்ந்த நிறுவனப் பங்குகளை அதிகளவில் வாங்கியது ஆகிய காரணங்களால், நேற்று இந்திய பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்தன.
நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 364.36 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தக இறுதியில், 38799.08 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, 0.95 சதவீத அதிகரிப்பாகும்.தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 94.85 புள்ளிகள் அதிகரித்து, 11466.45 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.83 சதவீத உயர்வாகும்.
நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், கோட்டக் மகிந்திரா வங்கி பங்குகள் அதிக விலைக்கு விற்பனை ஆகின. 3 சதவீதம் அளவுக்கு விலை அதிகரித்தது. இதையடுத்து, இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி., வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, பஜாஜ் பின்சர்வ், மாருதி மற்றும் எஸ்.பி.ஐ., ஆகிய நிறுவன பங்குகள் விலையும் அதிகரித்தன.
மாறாக, பவர்கிரிட், மகிந்திரா அண்டு மகிந்திரா, டெக் மகிந்திரா, டைட்டன், என்.டி.பி.சி., பஜாஜ் ஆட்டோ, அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை சரிவை சந்தித்தன.உலக அளவிலான சந்தைகளில் பாசிட்டிவ்வான நிலை, மற்றும் நிதி நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப் பட்டது ஆகியவை சந்தை உயர்வை சந்திக்க உதவியதாக பங்கு வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|