பதிவு செய்த நாள்
24 ஆக2020
21:35
புதுடில்லி:நாட்டில் வாகனத் தேவைகள் அதிகரித்து வருகின்ற போதிலும், வாகனங்களுக்கான கடன் உதவிகள் சரியாக கிடைக்கவில்லை என, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் நவீன் சோனி தெரிவித்துள்ளார். இதனால் விற்பனையில் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, இப்போது அதிகளவிலான ஆர்டர்கள் வருகின்றன. நிச்சயமாக, 20 லிருந்து, 30 சதவீதம் அளவுக்கு ஆர்டர்கள் அதிகரித்துள்ளதாக சொல்ல முடியும். ஆர்டர்கள் வரத்து அதிகரித்து வந்தாலும், வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவை கடன் வழங்குவதில் பிரச்னைகள் உள்ளன. இது சற்று கவலையளிப்பதாக இருக்கின்றது.
உதாரணமாக, வாடிக்கையாளர் ஒருவர் பத்து ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கடனில் மிகவும் சிறிய தொகை குறித்த பிரச்னை இருந்திருந்தாலும், இப்போது கடன் வாங்குவது மிகவும் சிரமமானதாகி விடுகின்றது.கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் அதிகப்படியான எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவதால், கால தாமதம் ஏற்படுகிறது.
அதற்காக, கேட்டதும் எந்த கடன் கொடுத்துவிட வேண்டும் என சொல்லவில்லை. அதே சமயம், கடன் கொடுப்பது குறித்த வாடிக்கையாளர்களுக்கான அளவுகோல்களை அடிக்கடி மாற்றாமல் இருப்பது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|