பதிவு செய்த நாள்
25 ஆக2020
11:31
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஆக.,25) ஏற்ற, இறக்கமாக வர்த்தகமானது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 157.31 புள்ளிகள் உயர்ந்து 38,956.39ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 46.70 புள்ளிகள் உயர்ந்து 11,513.15ஆகவும் வர்த்தகமானது.
இன்றைய வர்த்தகத்தில் எஸ்.பி.ஐ., பஜாஜ் பின்சர்வ், ஆக்சிஸ், ஐசிஐசிஐ., எச்டிஎப்சி, மாருதி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டன. தொடர்ந்து காலை 11.15 மணியளவில் சென்செக்ஸ் 29 புள்ளிகளும், நிப்டி 1 புள்ளிகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடர்ந்தன.
ரூபாயின் மதிப்பு சரிவு, ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்ற, இறக்கமான சூழலால் இந்திய பங்குச்சந்தைகளும் ஏற்ற, இறக்கமாக உள்ளன. மேலும் முதலீட்டாளர்களும் பங்குகளை அதிகளவில் வாங்கி, விற்பனை செய்ததாலும் ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகம் காணப்படுகின்றன.
ரூபாயின் மதிப்பு சரிவு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.74.38 ஆக வரத்தகமானது.
கச்சா எண்ணெய் விலை ஏற்றம்
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 0.22 சதவீதம் உயர்ந்து 45.74 அமெரிக்க டாலராக விற்பனையானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|