பதிவு செய்த நாள்
26 ஆக2020
00:09
திருப்பூர்:பிரதமரின்,‘தற்சார்பு இந்தியா’ முயற்சிக்கு தொழில் துறை துணை நிற்கும் என, ஏ.இ.பி.சி., எனும், ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சக்திவேல், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாசுக்கு அனுப்பிய கடிதம்:இயந்திரங்களை மறு மதிப்பீடு செய்து, அதற்கேற்ப, நிறுவனங்களை, குறு, சிறு, நடுத்தர நிறுவன பட்டியலில் சேர்க்கும் வகையில், விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் இந்த சீரமைப்பு நடவடிக்கையை, உடனடியாக செயல்படுத்த வேண்டுமென, ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இதனால், புதிதாக ஏராளமான நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பட்டியலில் இணையும். அரசு திட்டங்களை பயன்படுத்தி, இவை சிறப்பான வளர்ச்சி பெறும். மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் துரித செயல்பாடுகள், தொழில்துறையினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஆயத்த ஆடை துறை சார்ந்த தொழில்முனைவோர் மட்டுமின்றி, பல லட்சம் தொழிலாளர்களும் பயன் பெறுவர். பிரதமரின் ‘தற்சார்பு இந்தியா’ கனவு நனவாக, தொழில் துறை என்றென்றும் துணை நிற்கும்.இவ்வாறு, அவர் அதில் எழுதியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|