பதிவு செய்த நாள்
26 ஆக2020
01:01
புதுடில்லி:அமேசான், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பிளிப்கார்ட், பேடிஎம்’ உள்ளிட்ட பல நிறுவனங்கள், இந்தியாவின் சில்லரை விற்பனை சந்தையை வளைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கும் நிலையில், தற்போது, டாடா நிறுவனமும் அந்த வரிசையில் தயாராகி வருகிறது.
இந்திய நுகர்வோர்களை கவரும் வகையில், டாடா நிறுவனமும் புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறது. சூப்பர் செயலி ஒன்றை தயார் செய்து வருகிறது.இந்த சூப்பர் செயலி, அனைத்து வகையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஒரே இடமாக அமையும். டாடா நிறுவனத்தின் அனைத்து பொருட்கள் மற்றும் சேவையை பெற, இந்த சூப்பர் செயலி ஒன்றே போதுமானதாக இருக்கும்.
இது குறித்து, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் கூறியதாவது:இது ஒரு சூப்பர் செயலியாக இருக்கும். ஒரு செயலிக்குள் ஓராயிரம் செயலிகள் இருக்கும். அனைத்து தேவைகளுக்குமான ஒற்றை தளமாக இது இருக்கும். பல லட்சம் வாடிக்கையாளர்களை கொண்ட எங்களுக்கு, மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
டாடா நிறுவனத்தின் வசம் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இருப்பது அதற்கான பெரிய பலம்.சில்லரை விற்பனை ஸ்டோர்கள், நகைக் கடைகள், ஏர்லைன்ஸ், வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ், உணவு, பானங்கள், லைப்ஸ்டைல், சாட்டிலைட் டெலிவிஷன், நுகர்வோர் நிதி உதவி என பல துறைகளில் டாடா இருக்கிறது.
மேலும் டாடா கிளிக், ஸ்டார்பக்ஸ், டைட்டன், விஸ்டாரா, தனிஷ்க், தாஜ் ஓட்டல்கள், வெஸ்ட்சைடு என பல பிராண்டுகளும் டாடா வசம் ஏற்கனவே இருக்கின்றன.இனி இவை அனைத்தையும் டாடாவின் சூப்பர் செயலி மூலம் எளிதில் அணுக முடியும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|