ரிசர்வ் வங்கி கவர்னருக்கு ஏ.இ.பி.சி., தலைவர் கடிதம் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு ஏ.இ.பி.சி., தலைவர் கடிதம் ... ஜியோவால் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த வோடபோன், ஏர்டெல்! ஜியோவால் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த வோடபோன், ஏர்டெல்! ...
டாடாவின் புதிய முயற்சி தயாராகிறது ‘சூப்பர் செயலி’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2020
01:01

புதுடில்லி:அமேசான், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பிளிப்கார்ட், பேடிஎம்’ உள்ளிட்ட பல நிறுவனங்கள், இந்தியாவின் சில்லரை விற்பனை சந்தையை வளைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கும் நிலையில், தற்போது, டாடா நிறுவனமும் அந்த வரிசையில் தயாராகி வருகிறது.

இந்திய நுகர்வோர்களை கவரும் வகையில், டாடா நிறுவனமும் புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறது. சூப்பர் செயலி ஒன்றை தயார் செய்து வருகிறது.இந்த சூப்பர் செயலி, அனைத்து வகையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஒரே இடமாக அமையும். டாடா நிறுவனத்தின் அனைத்து பொருட்கள் மற்றும் சேவையை பெற, இந்த சூப்பர் செயலி ஒன்றே போதுமானதாக இருக்கும்.

இது குறித்து, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் கூறியதாவது:இது ஒரு சூப்பர் செயலியாக இருக்கும். ஒரு செயலிக்குள் ஓராயிரம் செயலிகள் இருக்கும். அனைத்து தேவைகளுக்குமான ஒற்றை தளமாக இது இருக்கும். பல லட்சம் வாடிக்கையாளர்களை கொண்ட எங்களுக்கு, மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

டாடா நிறுவனத்தின் வசம் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இருப்பது அதற்கான பெரிய பலம்.சில்லரை விற்பனை ஸ்டோர்கள், நகைக் கடைகள், ஏர்லைன்ஸ், வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ், உணவு, பானங்கள், லைப்ஸ்டைல், சாட்டிலைட் டெலிவிஷன், நுகர்வோர் நிதி உதவி என பல துறைகளில் டாடா இருக்கிறது.

மேலும் டாடா கிளிக், ஸ்டார்பக்ஸ், டைட்டன், விஸ்டாரா, தனிஷ்க், தாஜ் ஓட்டல்கள், வெஸ்ட்சைடு என பல பிராண்டுகளும் டாடா வசம் ஏற்கனவே இருக்கின்றன.இனி இவை அனைத்தையும் டாடாவின் சூப்பர் செயலி மூலம் எளிதில் அணுக முடியும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)