பதிவு செய்த நாள்
26 ஆக2020
11:48
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இருதினங்களாகவே ஏற்ற, இறக்கமாகவே வர்த்தகமாகின. காலையில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்த நிலையில் 11 மணியளவில் சிறிய சரிவை சந்தித்தது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 98.93 புள்ளிகள் உயர்ந்து 38,942.81ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 35.40 புள்ளிகள் உயர்ந்து 11,507.65ஆகவும் வர்த்தகமாகின. காலை 11.15 மணியளவில் சென்செக்ஸ் 4 புள்ளிகள் உயர்ந்தும், நிப்டி 12 புள்ளிகள் உயர்ந்தும் வர்த்தகமாகின. ரூபாயின் மதிப்பு சரிவு, ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவால் இந்திய பங்குச்சந்தைகள் சற்று தள்ளாட்டமாகவே உள்ளன.
ரூபாயின் மதிப்பு சரிவு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.74.38ஆக வர்த்தகமானது.
கச்சா எண்ணெய் விலை ஏற்றம்
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 0.24 சதவீதம் உயர்ந்து 46.40 அமெரிக்க டாலராக விற்பனையானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|