டாடாவின் புதிய முயற்சி தயாராகிறது ‘சூப்பர் செயலி’  டாடாவின் புதிய முயற்சி தயாராகிறது ‘சூப்பர் செயலி’ ... 100% மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாற பிலிப்கார்ட் இலக்கு! 100% மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாற பிலிப்கார்ட் இலக்கு! ...
ஜியோவால் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த வோடபோன், ஏர்டெல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2020
20:23

புது டில்லி: தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள அறிக்கையில், மே மாதம் வோடபோன், ஏர்டெல் நிறுவனம் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்ததாகவும், அதே மாதம் ஜியோ 37 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றதாகவும் கூறியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கினால் நகர்ப்புறத்திலிருந்து கிராமப்புறங்களுக்கு தொழிலாளர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்த நிலையில், 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி உள்ளிட்ட வயர்லெஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மே மாதத்தில் 0.5% குறைந்துள்ளது.

இது குறித்து டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மே மாதத்தில் 56 லட்சமாக குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில், வயர்லெஸ் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மே இறுதியில் 629 மில்லியனிலிருந்து 620 ஆகியுள்ளது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் இது 520 மில்லியனிலிருந்து 523 ஆக உயர்ந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் 2.9 லட்சம் பேர் மொபைல் எண் மாற்றும் முறை மூலம் வேறு நிறுவனத்திற்கு மாறியுள்ளனர். இவ்வாறு டிராய் கூறியுள்ளது.

ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் ஏர்டல், வோடபோன் நிறுவனம் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. ஜியோ 37 லட்சம் சந்தாரர்களை பெற்றுள்ளது. ஜியோவுக்கு அடுத்ததாக பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் 2 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக பெற்றிருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)