பதிவு செய்த நாள்
26 ஆக2020
20:23
புது டில்லி: தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள அறிக்கையில், மே மாதம் வோடபோன், ஏர்டெல் நிறுவனம் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்ததாகவும், அதே மாதம் ஜியோ 37 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றதாகவும் கூறியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கினால் நகர்ப்புறத்திலிருந்து கிராமப்புறங்களுக்கு தொழிலாளர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்த நிலையில், 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி உள்ளிட்ட வயர்லெஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மே மாதத்தில் 0.5% குறைந்துள்ளது.
இது குறித்து டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மே மாதத்தில் 56 லட்சமாக குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில், வயர்லெஸ் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மே இறுதியில் 629 மில்லியனிலிருந்து 620 ஆகியுள்ளது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் இது 520 மில்லியனிலிருந்து 523 ஆக உயர்ந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் 2.9 லட்சம் பேர் மொபைல் எண் மாற்றும் முறை மூலம் வேறு நிறுவனத்திற்கு மாறியுள்ளனர். இவ்வாறு டிராய் கூறியுள்ளது.
ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் ஏர்டல், வோடபோன் நிறுவனம் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. ஜியோ 37 லட்சம் சந்தாரர்களை பெற்றுள்ளது. ஜியோவுக்கு அடுத்ததாக பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் 2 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக பெற்றிருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|