ஜியோவால் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த வோடபோன், ஏர்டெல்!ஜியோவால் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த வோடபோன், ஏர்டெல்! ...  விரைவாக வழங்கப்படும் வருமான வரி ‘ரீபண்டு’ விரைவாக வழங்கப்படும் வருமான வரி ‘ரீபண்டு’ ...
100% மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாற பிலிப்கார்ட் இலக்கு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2020
20:25

புதுடில்லி: வால்மார்ட் கையகப்படுத்தியுள்ள பிலிப்கார்ட் நிறுவனமானது கரியமில வாயுக்களை குறைக்கும் நோக்கில் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் தங்கள் நிறுவனத்தில் 100% மின்சார வாகன பயன்பாட்டை கொண்டு வர உள்ளது.

கரியமில வாயுக்களை வெளியேற்றி பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதில் போக்குவரத்து துறையின் பங்கு 23% ஆகும். இதனை கட்டுப்படுத்த மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாற விரும்பும் நிறுவனங்களை பருவநிலை குழு எனும் சர்வேதச சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்றினைக்கிறது. ஈவி100 (மின்சார வாகனம் 100) என்ற திட்டத்தை இதற்காக கொண்டு வந்துள்ளது. இதில் இந்தியாவின் பிலிப்கார்ட் நிறுவனம் இணைந்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அந்நிறுவனம், ‘சுற்றுச்சூழல் நிலைத்தன்மை என்ற நோக்கத்துக்காக பருவநிலை குழுவின் ஈவி 100 என்ற முயற்சியுடன் இணைந்துள்ளோம். இதன் மூலம் உலகளாவிய முற்போக்கு சிந்தனை கொண்ட கண்ணோட்டங்களிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். 10 ஆண்டுகளுக்குள் பிலிப்கார்ட் நிறுவனம் விநியோகம் முதல் அனைத்திற்கு மின்சார வாகனத்தை பயன்படுத்தும்.

இதற்காக மின்சார வாகன நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்படும். எங்களின் 1,400 விநியோக சங்கிலி வளாகங்களுக்கு அருகே சார்ஜ் உள்கட்டமைப்பு நிறுவுதல், விழிப்புணர்வு திட்டங்களை நடத்துதல், மற்றும் டெலிவரி ஆட்களை மின்சார வாகனங்கள் பயன்படுத்த ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கை மூலம் இது படிப்படியாக சாத்தியமாக்கப்படும். இதன் மூலம் 2030-ல் 30% மின்சார வாகனங்கள் போக்குவரத்து என்ற இந்தியாவின் லட்சியத்திற்கு உதவுவோம்.’ இவ்வாறு கூறியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)