விரைவாக வழங்கப்படும் வருமான வரி ‘ரீபண்டு’ விரைவாக வழங்கப்படும் வருமான வரி ‘ரீபண்டு’ ... வாராக் கடன் வங்கி அவசியம் தேவை: சுப்பாராவ் வாராக் கடன் வங்கி அவசியம் தேவை: சுப்பாராவ் ...
பி.எஸ்.என்.எல்., லேண்ட்லைன் 1.34 லட்சம் பேர் விலகல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2020
00:47

சென்னை, ஆக. 27–

கடந்த மே மாதத்தில் நாடு முழுவதிலும், 1.34 லட்சம் பேரும்; தமிழகத்தில், 26 ஆயிரம் பேரும் பி.எஸ்.என்.எல்., லேண்ட்லைன் இணைப்பிலிருந்து வெளியேறி உள்ளதாக, தொலைத் தொடர்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையை பயன்படுத்துவோரின் விபரங்களை, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, ‘டிராய்’ மாதம் தோறும் வெளியிடும்.மே மாதத்தின் விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது.இதுகுறித்து, தொலைத் தொடர்பு அதிகாரிகள் கூறியதாவது:

தொலைத் தொடர்பு சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, ஏப்ரல் மாதத்தில், 116.94 கோடியாக இருந்தது,மே மாதத்தில், 116.36 கோடியாக குறைந்துள்ளது. ஒரு மாதத்தில், 58 லட்சம் இணைப்புகள் குறைந்து, 0.49 சதவீதம் சரிந்துள்ளது.இதில் மொபைல் போன் இணைப்பு, 5.61 சதவீதமும், லேண்ட்லைன் இணைப்பு, 0.15 சதவீதமும் சரிவடைந்துள்ளது. மொபைல் எண் போர்டபிலிட்டி சேவைக்காக, 49.12 கோடி வாடிக்கையாளர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இது, ஏப்ரலில், 48.82 கோடியாக இருந்தது.


தமிழகத்தில் மட்டும், 4.05 கோடி பேர் விண்ணப்பித்து உள்ளனர்.மேலும், லேண்ட்லைன் இணைப்பில், பி.எஸ்.என்.எல்.,லில் இருந்து, 1.34 லட்சம் வாடிக்கையாளர்கள் வெளியேறி உள்ளனர். இதில், தமிழகத்திலிருந்து, 26 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர்.பிராட்பேண்ட் சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, மாதத்திற்கு, 1.13 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)