பி.எஸ்.என்.எல்., லேண்ட்லைன்  1.34 லட்சம் பேர் விலகல் பி.எஸ்.என்.எல்., லேண்ட்லைன் 1.34 லட்சம் பேர் விலகல் ...  அலிபாபா குழுமத்தின் முதலீடு இந்தியாவில் தற்காலிக நிறுத்தம் அலிபாபா குழுமத்தின் முதலீடு இந்தியாவில் தற்காலிக நிறுத்தம் ...
வாராக் கடன் வங்கி அவசியம் தேவை: சுப்பாராவ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2020
01:07

புதுடில்லி:வாராக் கடன்களை நிர்வகிப்பதற்காக, தனியாக ஒரு வாராக் கடன் வங்கியை அமைப்பது என்பது தேவையானது மட்டுமல்ல; தவிர்க்க முடியாததும் ஆகும் என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் டி.சுப்பாராவ் கூறியுள்ளார்.

தற்போதைய சூழலில், வாராக் கடன்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், வாராக் கடன்களை நிர்வகிக்க தனியே ஒரு வங்கி அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உலகில் திறமையாக வடிவமைக்கப்பட்டு, வெற்றிகரமாக இயங்கும் வாராக் கடன் வங்கிகள் பல இருக்கின்றன. உதாரணமாக, மலேஷியாவில் இருக்கும் டானஹர்த்தா வங்கியை சொல்லலாம். நம் நாட்டில் ஒரு வாராக் கடன் வங்கியை அமைப்பதற்கு, இந்த வங்கி நல்ல மாதிரியாக இருக்கும்.வாராக் கடன் வங்கியின் முக்கிய நன்மை என்னவென்றால் ஊழல் இருக்காது. வட்டியிலும் தனிப்பட்ட ஆர்வங்கள் இருக்காது.\
தற்போதைய திவால் சட்ட கட்டமைப்புகள்போதாது. கூடுதல் சுமையை அவற்றால் சமாளிக்க முடியாது. எனவே தனியாக வாராக் கடன் வங்கி அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்தபட்சம், 5 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் எனும் பட்சத்தில் வாராக் கடன்கள் பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.மேலும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், மார்ச், 2021ல், வாராக் கடன், 12.5 சதவீதம் அதிகரிக்கும் என கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)