வாராக் கடன் வங்கி அவசியம் தேவை: சுப்பாராவ்வாராக் கடன் வங்கி அவசியம் தேவை: சுப்பாராவ் ...  அலிபாபா குழுமத்தின் முதலீடு இந்தியாவில் தற்காலிக நிறுத்தம் அலிபாபா குழுமத்தின் முதலீடு இந்தியாவில் தற்காலிக நிறுத்தம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அவசரகால கடன் திட்டத்தில் ரூ.1.56 லட்சம் கோடி அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2020
23:39

புதுடில்லி:மத்திய அரசின், அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், கடந்த, 24ம் தேதி வரை, மொத்தம், 1.56 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை அரசு அறிவித்திருந்தது. இதன்படி, நிறுவனங்கள் எந்த பிணையும் இன்றி, வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்ள முடியும்.

இதுகுறித்து, நிதியமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த, 24ம் தேதி வரை, மொத்தம், 1 லட்சத்து, 55 ஆயிரத்து, 995 கோடி ரூபாய் கடன்களுக்கான அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது, இதில், 1 லட்சத்து, 5 ஆயிரத்து, 926 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு விட்டது.

இந்த கடன்கள், 12 பொதுத் துறை வங்கிகள், 24 தனியார் துறை வங்கிகள், 31 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.கடந்த, 24ம் தேதி வரை, பொதுத் துறை வங்கிகள் மூலம், 76 ஆயிரத்து, 765 கோடி ரூபாய் கடனுக்கான அனுமதிகள் கொடுக்கப்பட்டு, 47 ஆயிரத்து, 696 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டது.

தனியார் துறை வங்கிகள், 79 ஆயிரத்து, 230 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களுக்கு ஒப்புதல் கொடுத்து, 47 ஆயிரத்து, 696 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.கடந்த, 18ம் தேதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது, 5,236 கோடி ரூபாய் அதிகம் வழங்கப்பட்டுள்ளது.அதிகபட்ச கடன்களை, எஸ்.பி.ஐ., வங்கி வழங்கி இருக்கிறது. இதற்கடுத்த இடத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)