வாராக் கடன் வங்கி அவசியம் தேவை: சுப்பாராவ்வாராக் கடன் வங்கி அவசியம் தேவை: சுப்பாராவ் ... அதிவிரைவு ஜார்ஜிங் திறனுடன் களமிறங்கும் ரியல்மி 7 அதிவிரைவு ஜார்ஜிங் திறனுடன் களமிறங்கும் ரியல்மி 7 ...
அலிபாபா குழுமத்தின் முதலீடு இந்தியாவில் தற்காலிக நிறுத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2020
23:44

புதுடில்லி:சீனாவை சேர்ந்த,‘அலிபாபா குழுமம், இந்தியாவில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன. அலிபாபா குழுமம், இந்தியாவில் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு வரும் நிறுவனமாகும்.

குறிப்பாக, ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், எல்லையில் சீனா மோதலை மேற்கொண்ட காரணத்தால், இந்தியாவுடனான வணிக உறவுகள் குறைந்து, அரசியல் அழுத்தங்கள் அதிகரித்திருப்பதை அடுத்து, அலிபாபா இத்தகைய முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து விபரம் அறிந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:அலிபாபா குழுமம் குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு புதிய முதலீடுகள் எதையும் இந்தியாவில் மேற்கொள்ள வேண்டாம் என கருதியுள்ளது. இருப்பினும், ஏற்கனவே மேற்கொண்டிருக்கும் முதலீடுகளிலிருந்து வெளியேறவோ அல்லது பங்குகளை குறைத்துக் கொள்ளவோ நிறுவனம் விரும்பவில்லை.


புதிதாக இந்தியாவிலுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என கருதுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.ஆனால், இது குறித்து அலிபாபா குழுமம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை; பதிலும் தெரிவிக்கவில்லை.

அலிபாபா மற்றும் அதன் துணை நிறுவனங்களான, அலிபாபா கேப்பிடல் பார்ட்னர்ஸ் மற்றும் ஆன்ட் குழுமமும், 2015ம் ஆண்டு முதல், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை, இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன.மேலும், குறைந்தபட்சம், 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி சுற்றுகளிலும் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)