அதிவிரைவு ஜார்ஜிங் திறனுடன் களமிறங்கும் ரியல்மி 7அதிவிரைவு ஜார்ஜிங் திறனுடன் களமிறங்கும் ரியல்மி 7 ...  ரிலையன்ஸ் – பியூச்சர்: முடிவுக்கு வரும் டீல் ரிலையன்ஸ் – பியூச்சர்: முடிவுக்கு வரும் டீல் ...
மின்னணு வர்த்தக சந்தை 2024ல், 100 பில்லியன் டாலர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2020
02:32

மும்பை:நாட்டின் சில்லரை விற்பனைக்கான, மின்னணு வர்த்தக சந்தை, 2024ல், 100 பில்லியன் டாலர் அதாவது, கிட்டத்தட்ட 7.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலானதாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த, 2019ல், இந்த சந்தையின் மதிப்பு, 2.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத் தக்கது.இந்த அதிகரிப்புக்கு, ஆன்லைன் மூலமான விற்பனையில் அதிக விற்பனையாளர் கள் ஆர்வம் காட்டுவதும், பொருட்களை வாங்கும் முறையில் நுகர்வோரிடம் ஏற்பட்டுள்ள மாற்றமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து, நிர்வாக சேவைகளை வழங்கி வரும், அல்வாரெஸ் அண்டு மார்சல் இந்தியா மற்றும் இந்திய தொழிலக கூட்டமைப்பின் சரக்கு போக்குவரத்துக்கான கல்வி நிறுவனமும் இணைந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுஉள்ளன.இதில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கடந்த, 2010ல், 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தையாக இருந்த மின்னணு வர்த்தக சந்தை, கடந்த 2019ல், 2.25 லட்சம் கோடி ரூபாய் சந்தையாக வளர்ந்துள்ளது.இந்த அளவுக்கு வளர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, ஸ்மார்ட்போன் விற்பனை மற்றும் அது சம்பந்தமான பொருட்கள் விற்பனையும் தான்.

எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகள் சந்தைகளை உயர்த்த வழி செய்தது. அதே சமயம், மளிகை பொருட்கள், மருந்தகம் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சந்தையை மேலும் அதிகரிக்க உதவி செய்தது.

கடந்த 2019ல், அமெரிக்க, சீன போன்ற நாடுகளில் சில்லரை விற்பனையில், மின்னணு வர்த்தகம் முறையே, 15 சதவீதம் மற்றும் 20 சதவீதமாகவும் இருந்த நிலையில், இந்தியாவில் இது, 2014ல், 6 சதவீதம் என்ற அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)