தங்க பத்திர வெளியீடு நாளை துவக்கம் தங்க பத்திர வெளியீடு நாளை துவக்கம் ...  பொதுத்துறை நிறுவனங்களால் ஜி.டி.பி.,யை அதிகரிக்க முடியும் பொதுத்துறை நிறுவனங்களால் ஜி.டி.பி.,யை அதிகரிக்க முடியும் ...
வால்மார்ட் வசம் வருமா‘டிக் டாக்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2020
00:29

புதுடில்லி:‘டிக்டாக்’ செயலியின் அமெரிக்க வணிகம், திங்கள் கிழமைக்குள்ளாக, மைக்ரோசாப்ட் -_ வால்மார்ட் கூட்டணியின் கைக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்தின் வீடியோ செயலியான,‘டிக் டாக்’கின் அமெரிக்க வணிகத்தை, அமெரிக்க நிறுவனத்துக்கு விற்று விட வேண்டும்; அல்லது தடை செய்யப்படும் என கூறி, 90 நாட்கள் காலக்கெடு விதித்திருந்தார், அமெரிக்க அதிபர் டிரம்ப்.இந்நிலையில், கடந்த வியாழன் அன்று, டிக்டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கெவின் மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

இதையடுத்து, டிக்டாக் செயலி விற்பனை செய்யப்படுவது உறுதியாகிவிட்டதாக சொல்லப்பட்டது. இதற்கேற்ப, மைக்ரோசாப்ட் நிறுவனமும் டிக்டாக்கை வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தது.இந்நிலையில், தற்போது டிக்டாக்கை வாங்குவதில் மைக்ரோசாப்டுடன் சேர்ந்துகொள்ள முன்வந்துள்ளது, வால்மார்ட் நிறுவனம்.

டிக்டாக் வணிகத்தை வாங்குவது குறித்து, வால்மார்ட் வெளியிட்ட அறிக்கையில், மைக்ரோசாப்ட் மற்றும் டிக்டாக் ஆகியவற்றுடனான கூட்டு, விளம்பர வணிகத்தை விரிவு படுத்துவதற்கும், மேலும் பட கடைக்காரர்களை அணுகுவதற்கும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளது.


இதற்கிடையே, மற்றொரு தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், ஜெனரல் அட்லாண்டிக் மற்றும் சீக்வோயா கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்களின் துணையுடன் டிக்டாக் வணிகத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.டிக்டாக்கின் தாய் நிறுவனமான, பைட்டான்ஸ், இதுவரை எந்த விலைக்கு விற்க தயாராக இருக்கிறது என்பது குறித்து எதுவும் சொல்லவில்லை.


ஆனால், வால் ஸ்டீரிட் ஜர்னல் பத்திரிகை, டிக்டாக்கின் அமெரிக்க வணிகத்தின் மதிப்பு, 30 பில்லியன் டாலர் ஆக இருக்கும் என கணித்துள்ளது.இது, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட, 2.23 லட்சம் கோடி ரூபாய். ஆனால், வாங்க விரும்பும் நிறுவனங்கள், இவ்வளவு தொகை கொடுத்து வாங்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த, 18ம் தேதிஅன்று, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆரக்கிள் பெரிய நிறுவனம் என்றும், டிக்டாக் வணிகத்தை அதனால் வாங்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.ஆனால், மைக்ரோசாப்ட் நிறுவனமா அல்லது ஆரக்கிள் நிறுவனமா, எதற்கு தன்னுடைய முன்னுரிமை என்பது குறித்து சொல்ல மறுத்துவிட்டார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)