பொதுத்துறை நிறுவனங்களால் ஜி.டி.பி.,யை அதிகரிக்க முடியும் பொதுத்துறை நிறுவனங்களால் ஜி.டி.பி.,யை அதிகரிக்க முடியும் ... விவசாய வளர்ச்சிக்கு உதவும், ‘ஸ்டார்ட் அப்’ விவசாய வளர்ச்சிக்கு உதவும், ‘ஸ்டார்ட் அப்’ ...
அதிகம் பாதிக்கப்படாதது விவசாயத் துறை நடப்பாண்டில் 3.5 சதவீத வளர்ச்சி காணும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2020
00:43

மும்பை:கிராமப் புற தேவைகள், பொருளாதார மீட்சிக்கு உதவும் என்றாலும், அவை நகர்ப்புற தேவைகளுக்கு ஈடாகாது என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் பொருளாதார மீட்சிக்கு, கிராமப் புற தேவைகள் உதவும் என்றாலும், அவை நகர்ப்புற தேவைகளுக்கு ஈடாகாது.கொரோனாவின் தாக்கத்திலிருந்து மீள, தொழில் துறை மற்றும் சேவைகள் துறை இன்னும் போராடி வரும் நிலையில், விவசாயத் துறை, பொருளாதார மீட்சிக்கான உந்துசக்தியாக மாறக்கூடும்.

"நாட்டின் ஜி.வி.ஏ., எனும், மொத்த மதிப்பு கூட்டில், விவசாயத்தின் பங்கு, சுமார், 17 சதவீதம் என்பதால், கிராமப்புற தேவை நுகர்வு தேவையை அதிகரிக்க உதவும் என நம்பலாம். ஆனால், அது நகர்ப்புற தேவைக்கு மாற்றாக இருக்க முடியாது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 17.03 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்புக் கணக்கு சுமார், 1,800 கோடி அமெரிக்க டாலர் உபரியை பதிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.நாடு முடக்கப்பட்ட போதும், அதன் பிறகும் ஒரே ஒரு துறை மட்டுமே பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. அது, விவசாயத் துறையாகும். நடப்பு ஆண்டில், இந்த துறை, 3.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை காணும்.ஆனால், விவசாயப் பொருட்கள் அதிகம் விளைச்சல் காணும்போது, அவற்றின் விலை குறையவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், விவசாய வருமானம் பாதிக்கப்படக்கூடும்.


அரசு, இதை தொடர்ந்து கண்காணித்து, தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாய உற்பத்தி, கிராமப்புற தேவையை அதிகரிப்பது ஒருபுறம் இருக்க, நாடு முடக்கப் பட்டதை அடுத்து, கிராமங்களுக்கு சென்றுவிட்ட தொழிலாளர்களாலும் கிராமப்புற தேவைகள் அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)