கைகள் நீண்டால்தான், மக்களுக்கு கொண்டாட்டம் ! கைகள் நீண்டால்தான், மக்களுக்கு கொண்டாட்டம் ! ...  ‘பென்ஷன்’ திட்டத்தில் சலுகை அறிவிப்பு ‘பென்ஷன்’ திட்டத்தில் சலுகை அறிவிப்பு ...
பெற்றோரின் முதலீடு ஆலோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2020
22:56

பிள்ளைகள் படித்து முடித்து, வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்கத் துவங்கியதும், பெற்றோர் அக்கறையோடு பணத்தை சேமிக்கும் அவசியம் பற்றி அறிவுரை கூறுவது வழக்கம். பல பெற்றோர், முதலீடு செய்வது தொடர்பாகவும் ஆலோசனை அளிக்கின்றனர்.


பெற்றோர் அறிவுரையை ஏற்பதே பொருத்தமானது என்றாலும், முதலீடு விஷயத்தில் அவர்கள் சொல்வதை பின்பற்றுவது சரியாக இருக்குமா என யோசிக்க வேண்டும். ஏனெனில், பெற்றோர் அளிக்கும் முதலீடு ஆலோசனைகள் நம்பிக்கைக்கு உரியதாக இருந்தாலும், செயல்திறன் மிக்கதாக இருக்குமா என்பது கேள்விக்குறி தான். இதற்கான காரணங்களை பார்க்கலாம்:


புதிய வாய்ப்புகள்:


அளிக்கும் முதலீடு ஆலோசனைகள் பெரும்பாலும், வைப்பு நிதி, காப்பீடு, நிலம் போன்ற முதலீடு வகைகள் சார்ந்ததாகவே இருக்கும். ஆனால், தற்போது பல்வேறு வகையான முதலீடு வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றில் இருந்து, நிதி இலக்குகளுக்கு பொருத்தமானவற்றை தேர்வு செய்வதே சரியாக இருக்கும்.


காப்பீட்டின் நோக்கம்:


காப்பீட்டை முதலீட்டு நோக்கில் அணுகும் தன்மையே பரவலாக இருக்கிறது. பெரும்பாலான பெற்றோர், நிதி இலக்குகளை அடையவும் காப்பீடு திட்டங்களை பரிந்துரைக்கலாம். ஆனால், காப்பீடு வேறு, முதலீடு வேறு என்பதை உணர வேண்டும். காப்பீடு மூலம் பாதுகாப்பை உறுதி செய்த பின், பொருத்தமான முதலீடு வாய்ப்புகளை நாட வேண்டும்.

வரிச் சலுகைகள்:


பாதுகாப்பு அம்சத்தை முதன்மையாக கருதியதால், வைப்பு நிதி போன்ற முதலீடுகளை தேர்வு செய்தனர். வரி விதிப்புக்கு பின், இந்த முதலீடுகள் குறைவான பலன் அளித்ததை அவர்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால், வரி சேமிப்பை சரியாக திட்டமிட்டு அதற்கேற்ப முதலீடு செய்தால், கூடுதல் பலன் பெறலாம்.


பங்குச் சந்தை பயம்:


பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கமான தன்மை காரணமாக ஏற்பட்ட அச்சத்தால், பெற்றோரில் பலரும், பங்கு முதலீட்டை தவிர்ப்பவர்களாகவே இருந்தனர். அவர்கள் ஆலோசனையிலும் இது பிரதிபலிக்கும். ஆனால், மியூச்சுவல் பண்ட்கள் மூலம், சந்தையின் பலனை பெறலாம் என்பதை அறிய வேண்டும்.


ஓய்வு காலம்:


கடந்த தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு, ஓய்வு கால திட்டமிடல் அத்தனை முக்கியமாக இருக்கவில்லை. ஓய்வு காலத்தில் பிள்ளைகளை சார்ந்து இருந்தனர். ஆனால், மாறி வரும் வாழ்க்கை முறையில், ஓய்வு காலத்திற்கு சரியாக திட்டமிட்டு, அதற்கான முதலீடுகளை மேற்கொள்வதும் அவசியமாகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)