பெற்றோரின் முதலீடு ஆலோசனை பெற்றோரின் முதலீடு ஆலோசனை ...  ‘பென்ஷன்’ திட்டத்தில் சலுகை அறிவிப்பு ‘பென்ஷன்’ திட்டத்தில் சலுகை அறிவிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பயன்படுத்திய கார் வாங்க அனுகூலங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2020
23:01

புதிய கார் வாங்குவதை விட, பயன்படுத்திய கார் வாங்குவது பட்ஜெட்டிற்கு ஏற்றதாக இருந்தாலும், வங்கி கடன் வசதி பெறுவது சிக்கலாக அமையலாம்.

வீட்டுக் கடன் போலவே வாகனக் கடன் வசதியும் பிரபலமாக இருக்கிறது. வாகனக் கடன் எனும் போது, புதிய கார் வாங்க வங்கியை நாடலாம். அதே போல, பயன்படுத்திய கார் வாங்கவும் கடன் வசதியை நாடலாம். பயன்படுத்திய கார் வாங்குவதில், பலவிதமான அனுகூலங்கள் இருக்கின்றன. புதிய காரை விட, பயன்படுத்திய கார் விலை குறைவாக இருக்கும்.


தற்போது, குறைந்த காலமே பயன்படுத்தப்பட்ட கார்களை கூட, இரண்டாம் சந்தையில் எளிதாக வாங்க முடிகிறது. எனவே, கார் வாங்க விரும்புகிறவர்கள், புதிய காருக்கு தேவையான தொகையை தங்களால் செலவிட முடியாது என நினைத்து, பயன்படுத்திய கார் வாங்குகின்றனர்.
தேவை அதிகரிப்பு

பயன்படுத்திய கார்களுக்கான விற்பனை சந்தையும் பெரிதாகவே இருக்கிறது. புதிய கார்களை விட, பயன்படுத்திய கார் சந்தை, 1.2 மடங்கு பெரிதாக இருப்பதாக, இத்தகைய கார்களை விற்பனை செய்யும், ‘ஸ்பின்னி’ இணையதளம் தெரிவிக்கிறது. தற்போது, கொரோனா முடக்கம் படிப்படியாக விலக்கப்பட்டு வரும் நிலையில், பலரும் பாதுகாப்பான போக்குவரத்து வசதிக்காக கார்களை நாடுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், பயன்படுத்திய கார்களை நாடுகின்றனர்.


ஏற்கனவே கார் வைத்திருப்பவர்களும், குடும்ப உறுப்பினர்களுக்கு இரண்டாவதாக, பயன்படுத்திய காரை நாடுகின்றனர்.பயன்படுத்திய கார் வாங்குவதில் பல்வேறு சாதகங்கள் இருந்தாலும், கடன் வசதி என்று வரும் போது சிக்கலாகலாம். ஏனெனில், வங்கிகள் பழைய கார் வாங்க கடன் வசதி அளிக்க தயக்கம் காட்டலாம் என்பதோடு, இதற்கான வட்டி விகிதமும் அதிகமாக இருக்கலாம் என்பது தான்.

பொதுவாக புதிய காருக்கான கடன் வட்டி விகிதத்தை விட, பழைய கார் கடனுக்கான வட்டி விகிதம், 3 முதல், 7 சதவீதம் அதிகமாக இருக்கலாம். பழைய கார் வாங்க கடன் வழங்க வங்கிகள் தயக்கம் காட்ட, பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.இடர் அம்சம்பழைய காருக்கான மதிப்பை சரியாக கணிக்க முடியாதது, ஒரு காரணம். மேலும் பழைய காரின் வரலாறு, நிலை, விபத்து அம்சம் போன்றவற்றை தெளிவாக அறிய முடியாததாலும், இடர்மிக்க கடனாக கருதப்படுகிறது.

புதிய காருக்கு இருப்பது போல, பழைய காருக்கு வாரண்டியும் கிடையாது. எனவே, பழைய கார் வாங்க கடன் வழங்க, வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன அல்லது அதிக வட்டி விகிதம் வசூலிக்கின்றன. பழைய கார் மீது, எந்த கடனும் இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதன் பிறகே வங்கிகள் கடன் வழங்க முன்வரும்.இந்த அம்சங்கள் தவிர, பழைய கார் வாங்கும் போது, அதன் மதிப்பில், 60 முதல், 80 சதவீதம் அளவிற்கே கடன் கிடைக்கலாம்.


இந்த நிலையில், மாற்று வாய்ப்புகளை நாடுவதும் பொருத்தமாக இருக்கும். வீட்டுக் கடன் பெற்றிருப்பவர்கள், அதன் மீதான, ‘டாப் அப்’ கடன் பெற்று, அதை கார் வாங்குவதற்கான நிதியாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான வட்டி விகிதம் குறைவாகவே இருக்கும்.


கடன் தவணையை முறையாக செலுத்தி வருபவர்களுக்கு, டாப் அப் கடன் எளிதாக கிடைக்கலாம். அதே போல, வட்டி விகிதம் சாதகமாக இருந்தால், தனிநபர் கடன் வசதியையும் நாடலாம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)