பதிவு செய்த நாள்
30 ஆக2020
23:07
‘அடல் பென்ஷன் யோஜானா’ திட்டத்தின் உறுப்பினர்கள், ஏப்ரல் – ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்திற்கு உரிய தொகையை, செப்டம்பர் இறுதிக்குள் அபராதம் இல்லாமல் செலுத்தலாம் என, பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வழி செய்யும் வகையில், அடல் பென்ஷன் யோஜானா திட்டம் செயல்பட்டு வருகிறது. அறுபது வயதுக்கு மேல் ஓய்வூதியம் கிடைப்பதை, இந்த திட்டம் உறுதி செய்கிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக, பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம், உறுப்பினர்களின் சேமிப்பு கணக்கில் இருந்து இந்த திட்டத்திற்கான தொகை தானாக பிடித்தம் செய்யப்பட, ஜூன் 30ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.உறுப்பினர்கள் நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜூலை மாதம் முதல், பென்ஷன் திட்டத்திற்கான தொகையை செலுத்தலாம் என, தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஏப்ரல் – ஆகஸ்ட் மாத காலத்திற்கான தொகையை, எந்த அபராதமும் இல்லாமல் செப்டம்பர் இறுதி வரை உறுப்பினர்கள் செலுத்தலாம் என, பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.அடல் பென்ஷன் யோஜானா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|