முடிந்தது ரிலையன்ஸ் ‘டீல்’  ஏற்றத்தில் ‘பியூச்சர்’ பங்குகள் முடிந்தது ரிலையன்ஸ் ‘டீல்’ ஏற்றத்தில் ‘பியூச்சர்’ பங்குகள் ...  முக்கிய 8 துறைகள் வளர்ச்சி 5வது மாதமாக பின்னடைவு முக்கிய 8 துறைகள் வளர்ச்சி 5வது மாதமாக பின்னடைவு ...
விமான நிலையங்கள் துறை ‘டேக் ஆப்’ ஆகும் அதானி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2020
22:14

புதுடில்லி,:பிரபல தொழிலதிபர் கவுதம் அதானிக்கு சொந்தமான, அதானி குழுமம், மும்பை விமான நிலையத்தில் உள்ள, ஜி.வி.கே., நிறுவன பங்குகளை கையகப்படுத்த உள்ளது. இதையடுத்து, அதானி குழுமம், நாட்டின் மிகப்பெரிய தனியார் விமான நிலைய நிர்வகிப்பாளராக மாறுகிறது.

அதானி குழுமத்தின் துணை நிறுவனம், ‘அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ்’. இந்நிறுவனம், எம்.ஐ.ஏ.எல்., எனும், மும்பை இன்டர்நேஷனல் ஏர்போர்ட் நிறுவனத்தில் உள்ள, ‘ஜி.வி.கே., ஏர்போர்ட் டெலவல்ப்பர்ஸ்’ நிறுவனத்தின் கடன்களை பெற்றுக் கொள்கிறது.


இதற்குப் பதிலாக, ஜி.வி.கே., குழுமத்தின், 50.5 சதவீத பங்குகள் அதானிக்கு கிடைக்கும். மேலும் அதானி குழுமம், சிறுபான்மை பங்குதாரர்களான, ‘ஏர்போர்ட்ஸ் கம்பெனி சவுத் ஆப்ரிக்கா’ மற்றும் ’பிட்வெஸ்ட் குழுமம்’ ஆகியவற்றிடமிருந்து, 23.5 சதவீத பங்குகளையும் கையகப்படுத்த உள்ளது.

இதையடுத்து, எம்.ஐ.ஏ.எல்., நிறுவனத்தின், 74 சதவீத பங்குகளும் அதானிக்கு வந்துவிடும். மீதி, 26 சதவீத பங்குகள் இந்திய விமான நிலைய ஆணையம் வசம் உள்ளன.அடுத்த கட்டமாக, மும்பை இண்டர்நேஷனல் ஏர்போர்ட் நிறுவனத்தில் மேலும் முதலீடுகளை செய்ய இருப்பதாகவும், நவி மும்பை பன்னாட்டு விமானநிலையம் அமைப்பதற்கான நிதி உதவிகளையும் மேற்கொள்ளும் என அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம், தற்போது விமான துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே திருவனந்தபுரம், அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு உள்ளிட்ட, ஆறு விமான நிலையங்களை நடத்துவதற்கான ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளது.இப்போது அடுத்த கட்டமாக, நாட்டின் இரண்டாவது பிஸியான மும்பை விமான நிலையத்தில் அடியெடுத்து வைக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)