பதிவு செய்த நாள்
01 செப்2020
21:39
புதுடில்லி:உத்தர பிரதேசம் நொய்டாவில் அமையவிருக்கும், பொம்மைகள் தயாரிப்பு மையத்தில், தொழிற்சாலைகள் அமைக்க, 92 உள்நாட்டு பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துஉள்ளன.
இந்த பொம்மைகள் தயாரிப்பு மையம் அமைக்கப்படும் பட்சத்தில், பொம்மைகளுக்கு, சீனாவை சார்ந்து இருக்கும் நிலை பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தன்னுடைய, 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், இந்தியா ஒரு பெரிய பொம்மை உற்பத்தி மையமாக மாறக்கூடும் என்று கூறியிருந்த நிலையில், உள்நாட்டு பொம்மை உற்பத்தியாளர்கள், தங்கள் ஆர்வத்தை இவ்வாறு வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்திய பொம்மைகள் சந்தையில், 90 சதவீத பொம்மைகள், சீனா மற்றும் தைவான் நாடுகளிலிருந்து இறக்குமதிசெய்யப்படுபவை ஆகும்.இந்நிலையில், உள்நாட்டு பொம்மை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், பொம்மைகள் தயாரிக்கும் ஆலைகள் அமைக்க இடவசதி ஏற்படுத்தி தரும்படி கோரிக்கை வைத்துவந்தனர்.இதையடுத்து, நொய்டா வில் பொம்மைகள் தயாரிப்பு மையம் அமைய இருக்கிறது.
இந்த மையத்தில் இருக்கும், 100 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்ட பிறகு, 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்ட இட ஒதுக்கீடு, இன்னும் இரு வாரங்களில் நிறைவு பெறும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|