பிரதமர் பேச்சுக்கு செவிசாய்த்த பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் பிரதமர் பேச்சுக்கு செவிசாய்த்த பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் ...  தயாரிப்பு துறை உற்பத்தி மீண்டும் நல்ல முன்னேற்றம் தயாரிப்பு துறை உற்பத்தி மீண்டும் நல்ல முன்னேற்றம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வேகம் எடுக்க துவங்கியது, வாகனத் துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2020
21:45

புதுடில்லி:நாட்டின் வாகன விற்பனை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஓரளவு மீட்சியை கண்டுள்ளது. மாருதி உள்ளிட்ட சில நிறுவனங்கள், விற்பனை அதிகரிப்பை சந்தித்துள்ள நிலையில், டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

ஆகஸ்ட் மாதத்தில் தேவைகள் அதிகரித்த போதிலும், வினியோகத்தில் சிக்கல்கள் இருந்ததால், சில நிறுவனங்கள் சரிவைக் கண்டுள்ளன. ஆனால், டிராக்டர்கள் விற்பனை நன்றாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுசூகி


மாருதி சுசூகி நிறுவனத்தை பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மொத்தம், 1.25 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 17 சதவீத உயர்வாகும்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை, 1.06 லட்சமாக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை, 20.2 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்டில், 97 ஆயிரத்து, 061 வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஆகஸ்டில், 1.17 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.

மேலும், சிறிய ரக கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது.குறிப்பாக, ஆல்ட்டோ, வேகன் ஆர் ஆகியவற்றின் விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 94.7 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.ஆனால், மிட் சைஸ் காரான, சியாஸ் விற்பனை, 23.4 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

ஹூண்டாய்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தை பொறுத்தவரை, ஆகஸ்டில், இதன் மொத்த விற்பனை, 6 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. ஆனால், உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை, 19.9 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை, மதிப்பீட்டு மாதத்தில், 52 ஆயிரத்து, 609 வாகனங்கள் ஆகும். இதுவே, கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனை, 56 ஆயிரத்து, 5 வாகனங்களாக அதிகரித்திருந்தது.

அதே சமயம், உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஆகஸ்டில், 38 ஆயிரத்து, 205 ஆக இருந்த நிலையில், கடந்த ஆகஸ்டில், 45 ஆயிரத்து, 809 ஆக அதிகரித்து உள்ளது.ஏற்றுமதியை பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஆகஸ்டில், 17 ஆயிரத்து, 800 வாகனங்களாக இருந்த நிலையில், கடந்த ஆகஸ்டில், 61.79 சதவீதம் சரிந்து, 6,800 வாகனங்களாக குறைந்துவிட்டது.

பிற நிறுவனங்கள்

எம்.ஜி., மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை, 41.2 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, 2,018 வாகனங்கள் விற்பனை ஆன நிலையில், இந்த ஆகஸ்டில் 2,851 வாகனங்களாக அதிகரித்துள்ளது.டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் விற்பனை, 48.08 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில், 10 ஆயிரத்து, 701 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஆகஸ்டில் 5,555 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.

இதே போல், மகிந்திரா நிறுவனமும் மொத்த விற்பனையில், 16 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை, 13 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் பிரிவு விற்பனை, 4 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்நிறுவனத்தின் டிராக்டர் விற்பனை, 65 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில், 14 ஆயிரத்து, 817 டிராக்டர்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், மதிப்பீட்டு மாதத்தில், 24ஆயிரத்து, 458 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.இதே போல், எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் டிராக்டர் விற்பனையும், 80 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)