பதிவு செய்த நாள்
01 செப்2020
21:51
புதுடில்லி:கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சியில், மீண்டும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
கடந்த, 5 மாதங்களுக்குப் பிறகு, அதாவது பிப்ர வரி மாதத்துக்கு பிறகு, முதன் முறையாக, வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு, வணிக நடவடிக்கைகள் மீண்டும் துவங்கியதை அடுத்து, வாடிக்கையாளர் தேவை அதிகரித்துள்ளது. மேலும் உற்பத்தி அளவுகள் மற்றும் புதிய ஆர்டர்கள் ஆகியவற்றில் மீண்டும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.பிரிட்டனை சேர்ந்த, ’ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளை சேர்ந்த, 400 நிறுவனங்களின், ஆகஸ்ட் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தாண்டு, ஆகஸ்ட் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, 'பி.எம்.ஐ.,' குறியீடு, 52 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, ஜூலையில், 46 புள்ளிகளாக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். ஆகஸ்ட் மாதத்தில், இக்குறியீடு, 52 புள்ளிகளுக்கு உயர்ந்ததன் மூலம், வலுவான முன்னேற்றத்தை உணர்த்தியுள்ளது.
தொடர்ந்து, 32 மாதங்களாக பி.எம்.ஐ., குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேலாக இருந்து வந்தது, கடந்த ஏப்ரலில் இருந்து சரிவைக் கண்டது. தற்போது ஆகஸ்டில் மீண்டும் எழுச்சி கண்டிருக்கிறது.புதிய ஆர்டர்கள் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்த போதும், வேலையிழப்பும் தொடர்ந்து இருந்து வருகிறது. அதையும் மீறி இத்துறை வளர்ச்சியை கண்டுள்ளது.
வினியோகஸ்தர்கள் பற்றாக்குறை, தொற்று நோயால் ஏற்பட்ட போக்குவரத்து தாமதங்கள் ஆகியவை காரணமாக உள்ளீட்டு விலை, ஆகஸ்ட் மாதத்தில்அதிகரித்திருந்தது.வரும் காலத்தை பொறுத்தவரை, இந்திய உற்பத்தியாளர்கள் அடுத்த, 12 மாதங்களுக்கு நம்பிக்கையுடன் உள்ளனர்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|