பதிவு செய்த நாள்
01 செப்2020
21:54
மும்பை:நேற்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 73 காசுகள் அதிகரித்து, 72.87 ரூபாயில் நிலைபெற்றது.
அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்ததாலும், உள்நாட்டு பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு ஏற்பட்டது.அன்னிய செலாவணி வர்த்தகர்கள் இது பற்றி தெரிவித்தபோது, ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் எடுப்பதாக அறிவித்ததை அடுத்து ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக தெரிவித்தனர்.
அன்னிய செலாவணி சந்தையில் டாலரின் துவக்க மதிப்பு, 73.18 ரூபாயாக இருந்தது. பின் இது வலுப்பெற்று வர்த்தக இறுதியில், 72.87 ரூபாயாக நிலைபெற்றது. இது முந்தைய நாளின் இறுதி மதிப்புடன் கணக்கிட்டால், 73 காசுகள் அதிகரிப்பாகும்.வர்த்தகத்தின் இடையே ரூபாயின் மதிப்பு, 72.75 ரூபாய் அளவுக்கு அதிகபட்சமாக அதிகரித்தது. குறைந்தபட்சம், 73.19 ரூபாயாக இருந்தது.
பொருளாதார மீட்சியை உறுதிசெய்யும் நோக்கில் பணப்புழக்கத்தின் மீதான அழுத்தத்தை எளிதாக்குவதற்கும், இணக்கமான நிதி நிலைமைகளை பேணுவதற்கும் பல நடவடிக்கை களை எடுக்க இருப்பதாக ரிசர்வ் வங்கி திங்களன்று அறிவித்தது. இது ரூபாய் மதிப்பை அதிகரிக்க உதவியது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|