பதிவு செய்த நாள்
02 செப்2020
22:26
மும்பை, செப். 3–பங்குச் சந்தைகளில், அன்னிய முதலீடுகள் வரத்து தொடர்ந்து நிலையாக இருந்து வருவதாலும், உலகளவிலான சந்தைகளில் நிலைமை நேர்மறையாக இருப்பதாலும், நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையின்,‘சென்செக்ஸ்’, 185.23 புள்ளிகள் அதிகரித்து, 39086.03 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, 0.48 சதவீத உயர்வாகும்.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’யும், 64.75 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 11535 புள்ளிகளில் நிலைபெற்றது.
பங்குச் சந்தையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், உலக சந்தைகளில் சாதகமான போக்கு நிலவுவதாலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்ததாலும், நேற்று பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்தன என வர்த்தகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் குறியீட்டில், மகிந்திரா அண்டு மகிந்திரா பங்குகள் அதிக விலை உயர்வை கண்டன.இந்நிறுவன பங்குகள், 6 சதவீதம் அளவுக்கு விலை அதிகரித்தன.இதையடுத்து, பவர்கிரீட், டாடா ஸ்டீல், இண்டஸ்இண்ட் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.சி.எல்., டெக், ஓ.என்.ஜி.சி., இன்போசிஸ் ஆகிய நிறுவனப் பங்குகளும் விலை உயர்ந்தன.மாறாக, பஜாஜ் ஆட்டோ, ஏஷியன் பெயின்ட்ஸ், சன் பார்மா, எச்.டி.எப்.சி., நெஸ்ட்லே ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவைக் கண்டன.
கடந்த செவ்வாய் கிழமையன்று மட்டும், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், 486 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|